இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 4, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். யார் அவர்? இத்தகைய உயரத்தை அவர் அடைந்தது எப்படி? விரிவாகப் பார்க்கலாம்.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் AI இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வரும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். அத்தகையை AI தொழில்நுட்பத்தை கையிலெடுத்து இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ்.

31 வயதான இவர் M3M HURUN INDIA RICH LIST 2025 பட்டியலில் 21 ஆயிரத்து 190 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். PERPLEXITY செயற்கை நுண்ணறிவு START UP கம்பெனியை நிறுவிய அரவிந்த் ஸ்ரீநிவாஸ் அதன் CEO-வாக செயல்பட்டு வருகிறார்.

1994-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த அரவிந்த் ஐ.ஐ.டி.யில் பொறியியல் படித்தவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை நிறைவு செய்த அரவிந்த் OPEN AI நிறுவனத்தில் பணியாற்றினார்.

பின்னர் நண்பர்களுடன் இணைந்து PERPLEXITY AI நிறுவனத்தை 2022-ஆம் ஆண்டு தொடங்கினார். OPEN AI-ன் CHAT GPT-க்கு போட்டியாக வந்த PERPLEXITY மூன்றே ஆண்டுகளில் முன்னணி நிறுவனமாக மாறியிருக்கிறது. சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு GOOGLE BROWSER-ஐ விலைபேசும் அளவுக்கு அரவிந்த் ஸ்ரீநிவாஸ் வளர்ந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவரது திறமையை அறிந்த பிரதமர் மோடி அண்மையில் அவரை அழைத்துப் பேசினார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் போன்ற திரை பிரபலங்களும் AI தொழில்நுட்பம் குறித்து அரவிந்திடம் பேசியிருக்கிறார்கள். தமது திறமையால் இந்தியாவை மட்டுமின்றி உலகத்தையே வியந்து பார்க்க வைத்திருக்கிறார் அரவிந்த்.

இந்திய அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் முகேஷ் அம்பானி முதலிடத்தையும் 8 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் கவுதம் அதானி இரண்டாம் இடத்தையும் 2 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

குறுகிய காலத்தில் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள அரவிந்த் ஸ்ரீனிவாஸ், உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags: University of CaliforniaIndia's young billionaires.M3M HURUN INDIA RICH LIST 2025START UP companyChennaiopen aiArvind Srinivas
ShareTweetSendShare
Previous Post

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Next Post

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies