இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் - சிறப்பு தொகுப்பு!
Jul 28, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 4, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். யார் அவர்? இத்தகைய உயரத்தை அவர் அடைந்தது எப்படி? விரிவாகப் பார்க்கலாம்.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் AI இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வரும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். அத்தகையை AI தொழில்நுட்பத்தை கையிலெடுத்து இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ்.

31 வயதான இவர் M3M HURUN INDIA RICH LIST 2025 பட்டியலில் 21 ஆயிரத்து 190 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். PERPLEXITY செயற்கை நுண்ணறிவு START UP கம்பெனியை நிறுவிய அரவிந்த் ஸ்ரீநிவாஸ் அதன் CEO-வாக செயல்பட்டு வருகிறார்.

1994-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த அரவிந்த் ஐ.ஐ.டி.யில் பொறியியல் படித்தவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை நிறைவு செய்த அரவிந்த் OPEN AI நிறுவனத்தில் பணியாற்றினார்.

பின்னர் நண்பர்களுடன் இணைந்து PERPLEXITY AI நிறுவனத்தை 2022-ஆம் ஆண்டு தொடங்கினார். OPEN AI-ன் CHAT GPT-க்கு போட்டியாக வந்த PERPLEXITY மூன்றே ஆண்டுகளில் முன்னணி நிறுவனமாக மாறியிருக்கிறது. சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு GOOGLE BROWSER-ஐ விலைபேசும் அளவுக்கு அரவிந்த் ஸ்ரீநிவாஸ் வளர்ந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவரது திறமையை அறிந்த பிரதமர் மோடி அண்மையில் அவரை அழைத்துப் பேசினார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் போன்ற திரை பிரபலங்களும் AI தொழில்நுட்பம் குறித்து அரவிந்திடம் பேசியிருக்கிறார்கள். தமது திறமையால் இந்தியாவை மட்டுமின்றி உலகத்தையே வியந்து பார்க்க வைத்திருக்கிறார் அரவிந்த்.

இந்திய அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் முகேஷ் அம்பானி முதலிடத்தையும் 8 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் கவுதம் அதானி இரண்டாம் இடத்தையும் 2 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

குறுகிய காலத்தில் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள அரவிந்த் ஸ்ரீனிவாஸ், உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags: University of CaliforniaIndia's young billionaires.M3M HURUN INDIA RICH LIST 2025START UP companyChennaiopen aiArvind Srinivas
ShareTweetSendShare
Previous Post

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Next Post

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies