இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 4, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். யார் அவர்? இத்தகைய உயரத்தை அவர் அடைந்தது எப்படி? விரிவாகப் பார்க்கலாம்.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் AI இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வரும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். அத்தகையை AI தொழில்நுட்பத்தை கையிலெடுத்து இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ்.

31 வயதான இவர் M3M HURUN INDIA RICH LIST 2025 பட்டியலில் 21 ஆயிரத்து 190 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். PERPLEXITY செயற்கை நுண்ணறிவு START UP கம்பெனியை நிறுவிய அரவிந்த் ஸ்ரீநிவாஸ் அதன் CEO-வாக செயல்பட்டு வருகிறார்.

1994-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த அரவிந்த் ஐ.ஐ.டி.யில் பொறியியல் படித்தவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை நிறைவு செய்த அரவிந்த் OPEN AI நிறுவனத்தில் பணியாற்றினார்.

பின்னர் நண்பர்களுடன் இணைந்து PERPLEXITY AI நிறுவனத்தை 2022-ஆம் ஆண்டு தொடங்கினார். OPEN AI-ன் CHAT GPT-க்கு போட்டியாக வந்த PERPLEXITY மூன்றே ஆண்டுகளில் முன்னணி நிறுவனமாக மாறியிருக்கிறது. சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு GOOGLE BROWSER-ஐ விலைபேசும் அளவுக்கு அரவிந்த் ஸ்ரீநிவாஸ் வளர்ந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவரது திறமையை அறிந்த பிரதமர் மோடி அண்மையில் அவரை அழைத்துப் பேசினார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் போன்ற திரை பிரபலங்களும் AI தொழில்நுட்பம் குறித்து அரவிந்திடம் பேசியிருக்கிறார்கள். தமது திறமையால் இந்தியாவை மட்டுமின்றி உலகத்தையே வியந்து பார்க்க வைத்திருக்கிறார் அரவிந்த்.

இந்திய அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் முகேஷ் அம்பானி முதலிடத்தையும் 8 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் கவுதம் அதானி இரண்டாம் இடத்தையும் 2 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

குறுகிய காலத்தில் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள அரவிந்த் ஸ்ரீனிவாஸ், உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags: University of CaliforniaIndia's young billionaires.M3M HURUN INDIA RICH LIST 2025START UP companyChennaiopen aiArvind Srinivas
Share
Tweet
SendShare
Previous Post

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Next Post

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies