மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!
Oct 3, 2025, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Web Desk by Web Desk
Oct 3, 2025, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவத்தை ஏவி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், மனித உரிமைகள் பற்றி பேசுவது அபத்தம் என்று, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா காட்டமாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடக்கிறது. அண்மையில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் அடுக்கியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா கர்ஜனையோடு தனது வாதத்தை முன்வைத்தது.

இந்திய தூதரான முகமது ஹூசைன் பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை கடுமையாக சாடினார். மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதில் மோசமான பதிவுகளைக் கொண்ட ஒரு நாடு, மனித உரிமைகள் குறித்து மற்ற நாடுகளுக்கு உபதேசம் செய்ய முயற்சிப்பது, முற்றிலும் முரணாக இருப்பதாக விமர்சித்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பாகிஸ்தான், இந்த மன்றத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இது அவர்களின் பாசாங்குதனத்தை மட்டுமே வெளிப்படுத்துவதாகவும் இந்திய தூதர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் பற்றிப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பதிலாக, சொந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அநீதியை, மத, இன பாகுபாட்டைப் பாகிஸ்தான் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் இந்திய தூதர் வலியுறுத்தினார். ANI அறிக்கையின்படி, 35வது கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் தூதர் அப்பாஸ் சர்வார், ஜம்மு காஷ்மீரில் மோசமான மனித உரிமை மீறல்களை மறைக்க இந்தியா முற்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்திய தூதர் முகமது ஹூசைன் இந்தியாவின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதேநேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல், ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுடன் ஒத்துப்போனது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றிய ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் நசீர் அஜீஸ்கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரமடைந்து வரும் அடக்குமுறைகளைக் களைய சர்வதேச தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம், ராணுவத்தின் அடக்குமுறைகளையும் அவர் அடுக்கடுக்காக முன்வைத்தது பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மனித உரிமைகள்பற்றிய பாகிஸ்தான் வாதத்தையும் நீர்த்துப் போகச் செய்தது.

Tags: ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியாIndiapakistanindia vs pakistanDo you talk about human rights? : India slams Pakistan at the UN
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

Next Post

ஆஸ்திரேலியா : கான்பெர்ராவில் பூத்து குலுங்கும் துலீப் மலர்கள்!

Related News

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies