மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவத்தை ஏவி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், மனித உரிமைகள் பற்றி பேசுவது அபத்தம் என்று, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா காட்டமாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடக்கிறது. அண்மையில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் அடுக்கியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா கர்ஜனையோடு தனது வாதத்தை முன்வைத்தது.

இந்திய தூதரான முகமது ஹூசைன் பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை கடுமையாக சாடினார். மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதில் மோசமான பதிவுகளைக் கொண்ட ஒரு நாடு, மனித உரிமைகள் குறித்து மற்ற நாடுகளுக்கு உபதேசம் செய்ய முயற்சிப்பது, முற்றிலும் முரணாக இருப்பதாக விமர்சித்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பாகிஸ்தான், இந்த மன்றத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இது அவர்களின் பாசாங்குதனத்தை மட்டுமே வெளிப்படுத்துவதாகவும் இந்திய தூதர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் பற்றிப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பதிலாக, சொந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அநீதியை, மத, இன பாகுபாட்டைப் பாகிஸ்தான் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் இந்திய தூதர் வலியுறுத்தினார். ANI அறிக்கையின்படி, 35வது கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் தூதர் அப்பாஸ் சர்வார், ஜம்மு காஷ்மீரில் மோசமான மனித உரிமை மீறல்களை மறைக்க இந்தியா முற்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்திய தூதர் முகமது ஹூசைன் இந்தியாவின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதேநேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல், ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுடன் ஒத்துப்போனது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றிய ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் நசீர் அஜீஸ்கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரமடைந்து வரும் அடக்குமுறைகளைக் களைய சர்வதேச தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம், ராணுவத்தின் அடக்குமுறைகளையும் அவர் அடுக்கடுக்காக முன்வைத்தது பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மனித உரிமைகள்பற்றிய பாகிஸ்தான் வாதத்தையும் நீர்த்துப் போகச் செய்தது.

Tags: ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியாIndiapakistanindia vs pakistanDo you talk about human rights? : India slams Pakistan at the UN
ShareTweetSendShare
Previous Post

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Next Post

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies