வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு - சிறப்பு தொகுப்பு!
Oct 5, 2025, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Oct 5, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் எல்லைகளில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.

இஸ்ரேலின், ‘அயர்ன் டோம்’ போல், இந்தியாவின் வான்பரப்பை பாதுகாக்க, ‘சுதர்சன சக்ரா’ திட்டம் தயாராகி வருகிறது. உள்நாட்டிலேயே மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த வான் கவசம், 2035ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட எஸ் – 400 வான் கவசம் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஆகாஷ்தீர்’ கருவியும் எதிரிகளின் ஏவுகணைகளை பந்தாடின. எனினும், தற்போது உருவாக்கப்பட்டு வரும் சுதர்சன சக்ரா, ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், சுதர்சன சக்ரா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. Advanced Weapon and Equipment India Ltd நிறுவனத்திடம் இருந்து ஆறு ஏகே 630 தளவாடங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ராணுவ கனரக வாகனங்களிலோ, போர்க்கப்பல்களிலோ பொருத்தப்பட்டிருக்கும் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடம், எதிரி நாட்டு இலக்குகளை சுழன்று சுழன்று தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. 4 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்குள் பறக்கும் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை துல்லியமாக தாக்கும் ஏகே 630, ஒரே நிமிடத்திற்கு மூவாயிரம் துப்பாக்கி குண்டுகளை தீப்பொறி பறக்க வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரில், இந்திய குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் குறிவைத்ததாகவும், இனிவரும் காலங்களில் அதற்கு முடிவு கட்டவே ஏகே 630-ஐ களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஐராத் மாநிலங்களில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்தி, எதிர்காலத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தனர்.

இதனிடையே இந்தியாவின் நடவடிக்கையால் தொடர்ச்சியாக அச்சத்தில் உள்ள பாகிஸ்தான், ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடம் கொள்முதல் செய்யப்படும் செய்தி கேட்டு மேலும் அலற தொடங்கியுள்ளது. இனி ஒருமுறை வாலாட்டினாலும் பாகிஸ்தான் கதையை முடித்து விடுவோம் என கங்கணம் கட்டி செயல்படும் பாஜக அரசு, அதற்கான ராணுவ கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டிவருகிறது.

Tags: AK 630 air defense systems'Sudarshan Chakra' projectindian armyMinistry of DefenseOperation SindoorIsrael's Iron Dome.
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

Related News

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies