பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த "கோல்ட்ரிப்" - தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!
Jan 14, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேசத்தில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும், தரமற்ற மருந்துக்குத் தடை விதித்துள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 10 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குஐராத் மாநிலத்திலும் ஒரு குழந்தை உயிரை விட, இனியொரு சம்பவம் நடந்து விடக் கூடாது எனச் சுகாதாரத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது.

பெரும்பாலான குழந்தைகள் 7 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்ததால், இக்கொடூர சம்பவம் மக்களை கவலையில் ஆழ்த்தியது. குழந்தைகள் அனைவரும், கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தைக் குடித்திருப்பது விசாரணையில் தெரியவர, உயிரை குடித்தது அந்த மருந்து தானா? என ஆராயப்பட்டது.

குழந்தைகளின் சிறுநீரக திசுவில் டை எத்திலின் கிளைக்கால் எனப்படும் கொடிய வேதிப்பொருள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால், கோல்ட்ரிப் என்பது இருமல் மருந்து அல்ல, விஷ மருந்து என்பது திட்டவட்டமானது. இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால்.

கோல்ட்ரிப் மருந்து தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது தான். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் இயங்கும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் கோல்ட்ரிப் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவர, அந்நிறுவனத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட ஒட்டுமொத்த மருந்துகளுக்கும் மத்திய பிரதேச அரசு தடைவிதித்துள்ளது.

அதுமட்டுமல்ல, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிந்து உயிரிழந்த குழந்தைகளுக்கு நீதி கேட்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மத்திய பிரதேச அரசு. மேலும் கோல்ட்ரிப் மருந்தை குழந்தைகளுக்குப் பரிந்துரைத்த மருத்துவரையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது.

பிஞ்சுக் குழந்தைகள் உயிரை விட்ட சம்பவம், நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், பல்வேறு மாநில அரசுகள் அலர்ட் ஆகி இருக்கின்றன. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களும் கோல்ட்ரிப் மருந்துக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளன.

மருந்தகங்களில் இருக்கும் கோல்ட்ரிப் ஸ்டாக் அனைத்தும் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனிடையே, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளுக்கு முடிந்த வரையில், சிரப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், குழந்தைகளுக்குச் சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதால் மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags: KeralaTamil Nadu"Goldtrip" that took the lives of unborn children - Tamil Nadu and Kerala have banned the substandard drug!கோல்ட்ரிப் இருமல் மருந்துதரமற்ற மருந்துக்கு தடை
ShareTweetSendShare
Previous Post

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

Next Post

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies