மேற்குவங்க மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த நிகழ்வுகளில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.