கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் - IMF எச்சரிக்கை!
Oct 7, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 7, 2025, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் நம்பகத் தன்மையைச் சர்வதேச அளவில் கேள்விக்குறியாகி உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சராசரியாக ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கும் ஒரு ஒப்பந்தம் என்ற அளவில், 25 முறைக்கும் மேல் 1958 முதல் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் கடன் பெற்றுள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தின் பலவீனத்தைக் குறிக்கிறது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி மற்றும் மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி என்ற இரண்டு IMF கடன் திட்டங்களில் இருந்து பாகிஸ்தான் கடன் வாங்கி உள்ளது. முதல் திட்டம் பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் நிதியுதவி யாகும்.

இதில் இதுவரை சுமார் 2.1 பில்லியன் டாலர் வரை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.3 பில்லியன் மதிப்புள்ள இரண்டாவது கடன் திட்டம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தானுக்கு IMFயால் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த கட்ட தவணை கடன் பெறும் நேரத்தில், பாகிஸ்தான் காட்டிய நிதிகணக்கில் முரண்பாடுகள் இருப்பதாகப் பகிரங்கமாக IMF தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள முரண்பாடுகளைப் பாகிஸ்தானின் தரவுகளில் இருப்பதை IMF கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தான் வருவாய் ஆட்டோமேஷன் லிமிடெட் (PRAL) மற்றும் பாகிஸ்தான் ஒற்றை சாளரம் (PSW) ஆகிய இரண்டு வெவ்வேறு நிறுவனங்களால் 2023-2024 நிதியாண்டுக்கான இறக்குமதி தரவு கிட்டத்தட்ட 5.1 பில்லியன் டாலர் வித்தியாசத்தைக் கொண்டிருப்பதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி தரவுகளில் உள்ள வேறுபாடு, 5.7 பில்லியன் டாலராக அதிகரித்தது. பாகிஸ்தான் ஒற்றை சாளரத்தால் வழங்கப்பட்ட மொத்த இறக்குமதி மதிப்பு, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் கணக்கீடுகளை விட அதிகமாக உள்ளது.

இந்தத் தரவுகள் நடப்புக் கணக்கு உபரியைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் தரவு மூலங்களை பாகிஸ்தான் வருவாய் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தான் ஒற்றை சாளரத்துக்கு மாற்றியதால் ஏற்பட்டது என்று பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் IMF-க்கு விளக்கியுள்ளனர். மேலும் சர்வதேச வர்த்தக மையத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வர்த்தக தரவுகள் முழுமையானது அல்ல என்று பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தான் தனது தரவுகளில், தனது தகவலறிக்கையில் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று IMF வலியுறுத்தியுள்ளது. மறுஆய்வுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் புள்ளிவிவர பணியகத்தை (PBS) IMF தொடர்பு கொண்டதாகவும், பின்னர் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துடன் பேச்சவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாகப் பாகிஸ்தான் இறக்குமதியாளர்களுக்கும் சீன ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான வர்த்தகத் தரவுகளுக்கு இடையிலான குளறுபடிகளை விசாரிக்கத் தொடங்கியபோது இந்த முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பாகிஸ்தான் இறக்குமதியாளர்கள் அறிவித்த பொருட்களுக்கும் சீன ஏற்றுமதியாளர்கள் அறிவித்த பொருட்களுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

ஜவுளி இறக்குமதியில் 3 பில்லியன் டாலர் அளவுக்கான இறக்குமதிகளும் உலோகங்கள் இறக்குமதியில் இறக்குமதிகள் சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்கான இறக்குமதிகளும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் காட்டப்படவில்லை.

இதற்கிடையே கடந்த நிதியாண்டுகளில் இரண்டு அரசு நிறுவனங்கள் வழங்கிய வர்த்தக தரவுகளில் சுமார் 11 பில்லியன் மதிப்புள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு IMF, பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

Tags: IMF எச்சரிக்கைpakistanசிக்கிய பாகிஸ்தான்Fake account to get loan: Pakistan caughtIMF warns
ShareTweetSendShare
Previous Post

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

Next Post

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

சீனாவில் மாதந்தோறும் ஹேர் டை பயன்படுத்தி வந்த இளம் பெண் சிறுநீரக கோளாறு!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

இண்டிகோ மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!

தெலங்கானா : விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் – மாணவர்கள் காயம்!

லோரியல் பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

புதிய படத்துக்காக களரி கற்கும் இஷா தல்வார்!

உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!

பரப்பன அக்ரஹாரா சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய கைதி!

சென்னை : பைபாஸ் சாலையில் பைக் சாகசம் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies