4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!
Oct 8, 2025, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

Web Desk by Web Desk
Oct 8, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொந்த நாட்டைச் சேர்ந்த 4 லட்சம் பெண்களைப் பாகிஸ்தான் ராணுவம் பாலியல் வன்முறை செய்ததாக ஐநா சபையில் இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் தூதர் சைமா சலீம், காஷ்மீரில் பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரிஷ், துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு எதிராகக் குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு எதிராகப் பாகிஸ்தான் முன் வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் ஐநா சபை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் செயல்பாடு கலங்கமில்லாதது என்று கூறிய அவர், தன் சொந்த மக்களைக் குண்டுவீசி கொல்லும் பாகிஸ்தான் பாதுகாப்பு குறித்து பேசுவது வேடிக்கையானது என்றும் கூறியுள்ளார். கடந்த மாதம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரே இரவில் நடந்த வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களைப் பாகிஸ்தான் விமானப்படை கொன்றதைக் குறிப்பிட்டு, தவறான தகவல்களைச் சொல்வதன் மூலம் பாகிஸ்தான் உலகை திசைதிருப்ப மட்டுமே முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பர்வதனேனி ஹரிஷ், 1971-ல் கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது 30 லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், சுமார் 4 லட்சம் பெண்களைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து பாகிஸ்தான் இராணுவம் கொன்று குவித்தது என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையை அனுமதித்த நாடு தான் பாகிஸ்தான் என்றும் பர்வதனேனி ஹரிஷ் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது அரங்கேறிய கொடூரங்களை எல்லாம் மேற்பார்வையிட்ட பாகிஸ்தானின் மோசமான இராணுவத் தளபதி ஜெனரல் டிக்கா கான் டார், பிறகு வங்காளத்தின் கசாப்புக்காரன்’ என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இறுதியில் இந்திய இராணுவத்திடம் தோல்வியை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம் டாக்காவில் நிபந்தனையின்றி சரணடைந்தது.

அதன்பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகச் சுதந்திரம் பெற்றது. சொந்த மக்களை இனப் படுகொலை செய்த பாகிஸ்தான் உண்மை முகத்தை சர்வதேச அரங்கில் கிழித்து தொங்கவிட்ட ஹரிஷ், உலக நாடுகள் பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Indiapakistanpakistan news todaySexual assault on 4 lakh women - Indian representative rips Pakistan at UN
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி வரையாடுகள் தினம் புகைப்பட கண்காட்சி!

Next Post

இந்தியன் ஆயில் நிறுவன மார்க்கெட்டிங் இயக்குநராக சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா நியமனம்!

Related News

கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி விடுமுறை!

விமானத்தின் காக்பீட்டிலிருந்து பிரிட்டன் பிரதமர் உரையாற்றிய காட்சிகள் வைரல்!

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

அரபு நாட்டை சேர்ந்தவர் யுனெஸ்கோ இயக்குநராக முதல் முறையாக தேர்வு!

மனைவிக்கு 120 கிராம் தங்கம் ரூ.18 லட்சம் பரிசு : Happy Divorce – கொண்டாடி தீர்த்த இளைஞர்!

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மீது வழக்குப்பதிவு

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை பெற்றதில் பாரதம் பெருமை கொள்கிறது – நயினார் நாகேந்திரன்

திருப்பூர் : பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

தனியார் நிறுவன வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு – 6 பேர் படுகாயம்!

கோலாகலமாக நடைபெற்ற இந்திய விமானப்படை தின அணிவகுப்பு நிகழ்ச்சி!

நடிகர் அஜித்குமாருக்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!

2 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர்!

தென்காசி : கார் தீ பிடித்து விபத்து – அசம்பாவிதம் தவிர்ப்பு!

அந்தரங்க வீடியோக்கள் நீக்க புதிய நெறிமுறைகள் : சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

நீலகிரி : விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானை – விவசாயிகள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies