4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!
Jan 14, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொந்த நாட்டைச் சேர்ந்த 4 லட்சம் பெண்களைப் பாகிஸ்தான் ராணுவம் பாலியல் வன்முறை செய்ததாக ஐநா சபையில் இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் தூதர் சைமா சலீம், காஷ்மீரில் பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரிஷ், துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு எதிராகக் குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு எதிராகப் பாகிஸ்தான் முன் வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் ஐநா சபை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் செயல்பாடு கலங்கமில்லாதது என்று கூறிய அவர், தன் சொந்த மக்களைக் குண்டுவீசி கொல்லும் பாகிஸ்தான் பாதுகாப்பு குறித்து பேசுவது வேடிக்கையானது என்றும் கூறியுள்ளார். கடந்த மாதம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரே இரவில் நடந்த வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களைப் பாகிஸ்தான் விமானப்படை கொன்றதைக் குறிப்பிட்டு, தவறான தகவல்களைச் சொல்வதன் மூலம் பாகிஸ்தான் உலகை திசைதிருப்ப மட்டுமே முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பர்வதனேனி ஹரிஷ், 1971-ல் கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது 30 லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், சுமார் 4 லட்சம் பெண்களைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து பாகிஸ்தான் இராணுவம் கொன்று குவித்தது என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையை அனுமதித்த நாடு தான் பாகிஸ்தான் என்றும் பர்வதனேனி ஹரிஷ் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது அரங்கேறிய கொடூரங்களை எல்லாம் மேற்பார்வையிட்ட பாகிஸ்தானின் மோசமான இராணுவத் தளபதி ஜெனரல் டிக்கா கான் டார், பிறகு வங்காளத்தின் கசாப்புக்காரன்’ என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இறுதியில் இந்திய இராணுவத்திடம் தோல்வியை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம் டாக்காவில் நிபந்தனையின்றி சரணடைந்தது.

அதன்பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகச் சுதந்திரம் பெற்றது. சொந்த மக்களை இனப் படுகொலை செய்த பாகிஸ்தான் உண்மை முகத்தை சர்வதேச அரங்கில் கிழித்து தொங்கவிட்ட ஹரிஷ், உலக நாடுகள் பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Indiapakistanpakistan news todaySexual assault on 4 lakh women - Indian representative rips Pakistan at UN
ShareTweetSendShare
Previous Post

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

Next Post

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies