இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!
Jan 14, 2026, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு பாகிஸ்தானின் அடிவயிற்றில் கிலியை கிளப்பியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்..

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் விதமாகக் கடந்த 10-ம் தேதி டெல்லி வந்த ஆஃப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து அந்தச் சந்திப்பு தொடர்பாக இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு வலுவான கண்டனங்களை பதிவு செய்த ஆஃப்கானிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தியா – ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான இணைந்த நிலைபாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, ஆஃப்கான் அமைச்சர் முத்தாகியும் ஆஃப்கானிஸ்தானின் நிலம் எந்த நாட்டிற்கும் எதிராகச் செயல்படாது என்றும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதே தங்கள் நாடு அமைதி மற்றும் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பகுதி என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு முரணானனது எனக்கூறி பாகிஸ்தான் செய்வதறியாது புலம்பத் தொடங்கியுள்ளது. அதேபோல, பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்னை எனக் குறிப்பிட்டிருந்த ஆஃப்கானிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான தங்களின் கவலைகளை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், இந்தியா – ஆப்கன் அரசுகள் உயர்மட்ட சந்திப்பில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா – ஆஃப்கானிஸ்தான் உறவுகள் புதிய திசையில் நகர வாய்ப்புள்ளது என்றாலும், மற்றொரு புறம் பாகிஸ்தானின் எதிர்ப்பால் பிராந்திய அளவிலான பிரச்னைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: IndiapakistanafganistanNew relationship blossoming between India and Afghanistan: Joint statement that soured Pakistan's stomach!
ShareTweetSendShare
Previous Post

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

Next Post

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies