ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!
Mar 15, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் திட்டத்தை மாற்றி, ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பசிபிக் கடல் பகுதியில், பெரும் அச்சுறுத்தலாக, சீனா தனது கடற்படை வலிமையை அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்​திய கடற்​படை அடுத்த 10 ஆண்​டு​களில், தன்​னிடம் உள்ள 10 பழைய நீர்​மூழ்கி கப்​பல் களை மாற்ற திட்​ட​மிட்​டுள்​ளது. சீனா​வும், பாகிஸ்​தானும் தனது கடற்​படையை விரை​வாக விரிவுபடுத்தி வரு​வ​தால், இந்​தி​யா​வும் தனது கடற்​படையை நவீனப்​படுத்த வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

கடந்த செப்டம்பர் மாதம், இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் அடுத்த ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

பிரான்ஸின் Naval Group உடன் இணைந்து ஸ்கார்பீன் நீர் மூழ்கி கப்பல்களையும், ஜெர்மனியின் ThussenKrupp நிறுவனத்துடன் இணைந்து Stealth நீர் மூழ்கி கப்பலையும் உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

கடந்த ஜனவரி மாதம், இந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு அரசுக்குச் சொந்தமான மசகான் நிறுவனத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தேர்ந்தெடுத்தது.

PROJECT 75 திட்டத்தின் கீழ், ஜெர்மன் நாட்டின் ஆதரவுடன் இந்தியாவில் கட்டப்படும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான 70,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மசகான் நிறுவனத்துக்கு மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது. 6 அதி நவீன நீர்​மூழ்கி கப்​பல்​களைத் தயாரிக்கத் திட்டமிடப் பட்டது.

தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் சுமார் 60 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாகும் இந்தக் கப்பல்கள், எதிர்கால PROJECT 76 திட்டத்துக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 44 ஆண்டுகளில் இந்தியா-ஜெர்மனி ஒன்று சேர்ந்து கப்பல்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும். ஜெர்மனியின் ‘திஸ்ஸென்க்ரப் மரைன் சிஸ்டம்ஸ்’ நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவுக்குக் கப்பல்களை தயாரித்துக் கொடுத்துள்ளது.

1980களில் இந்தியா 4 HDW Class 209 ரக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்தது. இந்தக் கப்பல்கள் கட்டுமானத்தில் ஜெர்மனியின் ‘திஸ்ஸென்க்ரப் மரைன் சிஸ்டம்ஸ்’ நிறுவனம் முக்கிய பங்காற்றியது.

இந்நிலையில், சுமார் 36,000 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதலாக மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான திட்டத்துக்கான இறுதி முடிவு என்னும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான மதிப்பீட்டுப் பேச்சுவார்த்தைகள் கடந்த நிதியாண்டிலேயே முடிவடைந்து இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் இறுதி ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய விமானப்படைக்கான சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 114 பல்துறைப் போர் விமானங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ்க் கூடுதல் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்குப் பிரான்சிடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், இந்தியாவின் ஐந்தாவது தலைமுறை மேம்பட்ட நடுத்தர ஸ்டெல்த் போர் விமான தயாரிப்புக்காக 61,000 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு புதிய சக்திவாய்ந்த இன்ஜினைப் பிரான்ஸுடன் இணைந்து உருவாக்குவதற்கானதிட்டமும் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ். அர்னாலா, இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பரில் , இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ்., ஆண்ட்ரோத் கடற்படையில் இணைக்கப்பட்டது.

சீனாவும் பாகிஸ்தானும் கடற்படையை வலிமையாக்கி வரும் நிலையில் இந்தியா கடற்சார்  பாதுகாப்பில் மிக வேகமாக முன்னேறிவருகிறது.

Tags: IndianewsTodayஜெர்மனிWork on building state-of-the-art submarines with German help intensifies: India to increase naval strengthஅதிநவீன நீர் மூழ்கி கப்பல்
ShareTweetSendShare
Previous Post

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

Next Post

திமுகவின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும் – வீடியோ வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies