தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!
Oct 16, 2025, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!

Web Desk by Web Desk
Oct 16, 2025, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர்.

திருச்செந்தூரில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சிவன் கோயில் மற்றும் ஜூவா நகர், ஜே.ஜே நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மழைநீர் உட்புகாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தேங்கிய மழை நீரை பொதுமக்களே வாளிகள் மூலம் அகற்றினர்.

இதேப்போல், திருச்செந்தூரில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், கழிவு நீர் ஓடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உகரணங்கள் இன்றி வெறும் கைகளால் சுத்தம் செய்யும் அவலம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவாயில் பகுதி மற்றும் பெண்கள் மகப்பேறு வார்டு, சிறுவர்கள் காய்ச்சல் வார்டுக்கு செல்லும் பகுதியில் வெள்ள நீர் தேங்கியது. இதனால், சிகிச்சைக்காகவும், உள்நோயாளியாகவும் உள்ளோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 67 மில்லி மீட்டரும், மூலைக்கரைப்பட்டியில் 60 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டையில் 56 மில்லிமீட்டரும், அம்பையில் 54 மில்லி மீட்டரும், நெல்லையில் 32 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக நெல்லை டவுன் ரத வீதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

Tags: rain alertweather updatelow pressurerain warningChennai metro logical depttutikorin raintamilnadu rainimdheavy rainnellai rain
ShareTweetSendShare
Previous Post

“கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பேரவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள்!

Next Post

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்!

Related News

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

பெற்றோருக்காக டெக்சாஸில் உயரமான கட்டடத்தில் வீடு வாங்கிய இளைஞர்!

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியா : HSBC வங்கி சார்பில் தீபாவளி கொண்டாட்டம்!

போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் படங்கள் வைரல்!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் : ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் பேட்டி!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies