டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டிடிவி தினகரனின் பேச்சால் மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடைபெறாது என்றும், அவர் குறித்து பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
டிடிவி தினகரனை பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம் என்றும் உதயகுமார் கூறினார்.
















