தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுப்பெறும் நிலையில், புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டு உள்ளது.
அக்டோபர் 28ம் தேதி மாலை அல்லது இரவு ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கபட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோந்தா புயல் உருவாகும் நாளைய தினம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
















