மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் - FATF அமைப்பு எச்சரிக்கை!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 28, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கியது பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உரிமம் வழங்காது என்று நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நிதி நடவடிக்கை பணிக்குழுவில் ‘சாம்பல் பட்டியல்’ பாகிஸ்தானின் வரலாறு பிப்ரவரி 2008-ல் தொடங்கியது. அப்போது அது சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது.

2010ம் ஆண்டு ஜூனில் பாகிஸ்தான் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து 2012ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பட்டியலில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டது.

2018ம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாவது முறையாகப் பாகிஸ்தான் மீண்டும் சாம்பல் பட்டியலில் கொண்டுவரப்பட்டது. 2022ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் அந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.

அப்போது, நாட்டின் பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி அமைப்பை மேலும் மேம்படுத்த, ஆசிய பசிபிக் குழுவுடன் இணைந்து செயல்படுமாறு, பாகிஸ்தானை நிதி நடவடிக்கை பணிக்குழு கேட்டுக் கொண்டது.

அதற்குப் பிறகும், சாம்பல் பட்டியலில் இருந்து நீக்குவதற்குத் தேவையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை பாகிஸ்தான் முழுமையாக அமல்படுத்தத் தவறியது. சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது தற்போது ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக உள்ளது என்றும், உலகில் எங்குப் பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும் அதன் வேர் பாகிஸ்தானில் இருப்பதை சர்வதேச நாடுகள் கண்டுபிடித்துள்ளன என்றும் இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் பாகிஸ்தானின் தோல்வி குறித்தும், இந்தியாவின் எல்லைக்குள் பாகிஸ்தானின் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதையே தனது அரசின் கொள்கையாக வைத்திருக்கும் பாகிஸ்தானை மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

கடந்த ஜூன் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்த நிதி நடவடிக்கை பணிக்குழு, ஒரு நாட்டின் நிதி உதவியும் ஆதரவும் இல்லாமல் இது போன்ற தாக்குதல் சாத்தியமற்றது என்பதையும் சுட்டிக்காட்டியது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி விதிமுறைகளை மீறும் பாகிஸ்தானின் நடவடிக்கைள் குறித்தும் ஒரு ஆவணத்தை இந்தியா தயாரித்தது.

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த ஆசிய பசிபிக் குழு கூட்டத்திலும், கடந்த அக்டோபர் 20ம் தேதி நடந்த நடைபெறும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கூட்டத்திலும் அந்த ஆவணத்தை இந்தியா சமர்ப்பித்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி நடவடிக்கை பணிக்குழு தலைவர் (Elisa de Anda Madrazo) எலிசா டி அண்டா மட்ராசோ, சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கியது, பயங்கரவாத நிதியுதவி மற்றும் பணமோசடி செய்வதற்கான உரிமம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பாகிஸ்தானில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது (JeM) போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீண்டும் நிதி திரட்டத் தொடங்கியுள்ளன. பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கு நிதியளிப்பதற்காக அவர்கள் டிஜிட்டல் பணப் பரிமாற்றத் தளங்கள் மற்றும் electronic wallets மூலம் நிதி திரட்டுவதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கடுமையான எச்சரிக்கை, சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாகவே பார்க்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படும் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Tags: pakistannewsFATFBack on the grey list: Pakistan will be quarantined - FATF warnspakisatan news
ShareTweetSendShare
Previous Post

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

Next Post

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies