பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 09:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியை கொலை செய்ய அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தீட்டிய சதித்திட்டத்தை இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து முறியடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்காசியாவில் செயல்படும் அமெரிக்க உளவுத்துறை உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் CIA, உலகம் முழுவதும் தனது மோசமான, ஜனநாயகம் அற்ற நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற உளவுத் துறையாகும். 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தொடங்கி, தற்போது வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிகளைக் கவிழ்த்தது வரை CIA வின் நடவடிக்கைகள் உலகமறிந்த ரகசியம்.

சமீப காலமாகத் தெற்காசிய நாடுகளில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு எல்லாம் பின்னணியில் CIA வின் பங்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு உயர்ரக ஹோட்டல் அறையில் அமெரிக்க சிறப்புப் படை அதிகாரியான டெரன்ஸ் அர்வெல் ஜாக்சன் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவர், பிரதமர் மோடியைக் கொல்ல அனுப்பப்பட்டவராக இருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதற்குச் சான்றாக, பல செய்திகளை ஒன்றிணைத்து காட்டும் புவிசார் அரசியல் வல்லுநர்கள், இந்தியா மற்றும் ரஷ்யாவின் உளவுத்துறையின் கூட்டு நடவடிக்கையால் பிரதமர் மோடியைக் கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

செயிண்ட் மார்ட்டின் தீவில் வங்கதேச இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்டவர் தான் CIA வின் சிறப்புப் படை அதிகாரி தான் டெரன்ஸ் அர்வெல் ஜாக்சன் என்று கூறப்படுகிறது. அவர் டாக்காவில் உள்ள ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அதே நாளில், சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குப் பிறகு, பிரதமர் மோடியைத் தனது பிரத்யேக காரில் அழைத்துக் கொண்டு ரஷ்ய அதிபர் புதின் பயணித்த்தை உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது. இருவரும் காருக்குள் 45 நிமிடங்கள் திட்டமிடப்படாத பேச்சுவார்தைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான ஆழமான நட்புகுறித்து உலகளவில் விவாதிக்கப்பட்டன.

அப்போது புரியவில்லை, இப்போது புரிகிறது எனப் புவிசார் அரசியல் வல்லுநர்கள் சில மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். காருக்குள் இருந்தபடியே பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் தலைமையில், இந்தியா மற்றும் ரஷ்ய உளவுத்துறைகளின் கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய அமெரிக்க சிறப்புபடை அதிகாரி டாக்காவில் மர்மமாகக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சீனாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்று விட்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி, டெல்லியில் நடந்த இந்த ஆண்டுக்கான SEMICOM மாநாட்டில் உரையாற்றினார்.

பிரதமர் பேசத் தொடங்கியதுமே கைதட்டி ஆரவாரித்த மக்களைப் பார்த்து, சீனா சென்றதால் கைதட்டுகிறீர்களா அல்லது திரும்பி வந்ததால் கைதட்டுகிறீர்களா ? என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார். இது பிரதமர் மோடியைக் கொல்ல நடந்த அமெரிக்காவின் சதியையும், அது முறியடிக்கப்பட்டதையும் வெளிக்காட்டுவதாகப் புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டுவது அமெரிக்காவுக்கு ஒன்றும் புதிதல்ல. பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பலமுறை பிரதமர் மோடிக்கு எதிரான கொலை சதிகள் நடந்துள்ளன.

இந்தியாவை சீர்குலைக்கவும் நாட்டில் உள்நாட்டுப் போரை உருவாக்கவும் அதன் பிறகு, அமெரிக்க சார்புடைய ஒரு பொம்மை ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்த நீண்ட காலமாகவே CIA தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து, இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததில் இருந்தே, அவரைக் கொல்ல பலவழிகளிலும் CIA உள்ளிட்ட சில வெளிநாட்டு உளவு அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன எந்தவித அந்நிய அச்சுறுத்தல்களுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் வலிமையான தேசியவாத மற்றும் முற்றிலும் சட்டபூர்வமான ஜனநாயக ஆட்சி நடத்தும் வரும் பிரதமர் மோடி அமெரிக்காவின் திட்டங்களுக்குத் தடையாக இருக்கிறார்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், நான்காவது பெரிய பொருளாதாரமாகவும், விளங்கும் இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எப்போதும் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, உலகத் தலைமை ஏற்கும் நாள் வெகுதொலைவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் சொன்னாலும் சரி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக இருந்தாலும் சரி, நாட்டின் பொருளாதார பாதுகாப்பை சமரசம் செய்யாமல் உறுதியான வர்த்தக கொள்கைகளை முன்வைத்தாலும் சரி, பிரதமர் மோடி தலைமையிலான இந்தப் புதிய இந்தியா உறுதியாகவும் துணிச்சலாகவும் நிமிர்ந்து நிற்கிறது.

இந்தியாவின் எழுச்சியால் கோபம் கொல்லும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க, பிரதமர் மோடியை கொல்வது போன்ற சதி திட்டங்களில் தொடர்ந்து ஈடுபடலாம். ஆனால், புதிய இந்தியா வுக்குத் துணையாக ரஷ்யா போன்ற நாடுகளும் உள்ளன என்பதையே டாக்காவில் CIA வின் சிறப்பு அதிகாரியின் மர்ம மரணம் எடுத்துக் காட்டுகிறது.

டாக்காவில் உண்மையில் என்ன நடந்தது என்ற மர்மம் தெரியாமலேயே போனாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்பது சர்வதேச நாடுகளுக்குத் தெரிந்து விட்டது.

Tags: PM ModiShocking news: Prime Minister Modi confirms CIA assassination plot foiled?
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

Next Post

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies