இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து - CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!
Oct 26, 2025, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 26, 2025, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்றும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான CIA -வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராகவும், CIA வில் 15 ஆண்டுகள் பணியாயற்றிய முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியாவை தூண்டி விடுவது, பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாகப் பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒரு போதும் பணியாது என்றும், எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுக்கும் என்றும் கூறியுள்ள ஜான் கிரியாகோ, 2016-ல் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019-ல் பாலகோட் தாக்குதல், மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

2001 நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாகவும், திருப்பித் தாக்கும் உரிமை பெற்றிருந்தும் இந்தியா, பாகிஸ்தானைத் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சியில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்கள் நிதிஉதவி வழங்கியதாகவும் அதற்குப் பிரதிபலனாகப் பாகிஸ்தானின் அணு ஆயுதக் களஞ்சியத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் முஷாரப் அமெரிக்காவிடம் ஒப்படைத்ததாகவும் விவரித்துள்ளார்.

இராணுவத்தையும், பயங்கரவாதிகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க, பயங்கர வாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதாக நடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை முஷாரப் அனுமதித்துக் கொண்டிருந்ததாகவும், அமெரிக்க என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்ய அனுமதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, பாகிஸ்தானின் பிரபல அணுசக்தி விஞ்ஞானியான ஏ.கே.கானை அமெரிக்கா கொல்லாமல் விட்டதாகக் கூறியுள்ள ஜான் கிரியாகோ, தற்போது, சீனா மற்றும் இந்தியாவுடன் சவூதி அரேபியா நல்லுறவை வளர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வட கொரியா, ஈரான் மற்றும் லிபியா போன்ற நாடுகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கியதால், உலகின் மிகவும் முக்கியமான அணுசக்தி கடத்தல்காரர்களில் ஒருவர் ஏ.கே. கான் குறிப்பிடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு, சித்திரவதை திட்டங்களை பகிரங்கமாக உறுதிப்படுத்திய முதல் CIA அதிகாரி என்பதுடன், ரகசிய தகவல்களை வெளியிட்ட காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் CIA அதிகாரி ஜான் கிரியாகோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: India can never be defeated: Scolding Pakistan is dangerous - Former CIA officer warnsIndiapakistanindia vs pakistanToday
ShareTweetSendShare
Previous Post

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Next Post

கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை : “4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்”!

Related News

கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை : “4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்”!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies