இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து - CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 09:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்றும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான CIA -வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராகவும், CIA வில் 15 ஆண்டுகள் பணியாயற்றிய முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியாவை தூண்டி விடுவது, பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாகப் பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒரு போதும் பணியாது என்றும், எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுக்கும் என்றும் கூறியுள்ள ஜான் கிரியாகோ, 2016-ல் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019-ல் பாலகோட் தாக்குதல், மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

2001 நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாகவும், திருப்பித் தாக்கும் உரிமை பெற்றிருந்தும் இந்தியா, பாகிஸ்தானைத் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சியில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்கள் நிதிஉதவி வழங்கியதாகவும் அதற்குப் பிரதிபலனாகப் பாகிஸ்தானின் அணு ஆயுதக் களஞ்சியத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் முஷாரப் அமெரிக்காவிடம் ஒப்படைத்ததாகவும் விவரித்துள்ளார்.

இராணுவத்தையும், பயங்கரவாதிகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க, பயங்கர வாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதாக நடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை முஷாரப் அனுமதித்துக் கொண்டிருந்ததாகவும், அமெரிக்க என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்ய அனுமதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, பாகிஸ்தானின் பிரபல அணுசக்தி விஞ்ஞானியான ஏ.கே.கானை அமெரிக்கா கொல்லாமல் விட்டதாகக் கூறியுள்ள ஜான் கிரியாகோ, தற்போது, சீனா மற்றும் இந்தியாவுடன் சவூதி அரேபியா நல்லுறவை வளர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வட கொரியா, ஈரான் மற்றும் லிபியா போன்ற நாடுகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கியதால், உலகின் மிகவும் முக்கியமான அணுசக்தி கடத்தல்காரர்களில் ஒருவர் ஏ.கே. கான் குறிப்பிடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு, சித்திரவதை திட்டங்களை பகிரங்கமாக உறுதிப்படுத்திய முதல் CIA அதிகாரி என்பதுடன், ரகசிய தகவல்களை வெளியிட்ட காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் CIA அதிகாரி ஜான் கிரியாகோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: India can never be defeated: Scolding Pakistan is dangerous - Former CIA officer warnsIndiapakistanindia vs pakistanToday
ShareTweetSendShare
Previous Post

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

Next Post

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies