பெஷாவரை நெருங்கும் TTP - தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!
Oct 26, 2025, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
Oct 26, 2025, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு.. பல பழங்குடி கிராமப் பகுதிகளை கைப்பற்றியுள்ள அந்த அமைப்பினர், பெஷாவரை நோக்கி நகர்ந்து வருவது, இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மீண்டும் பற்ற வைத்துள்ளது.

பாகிஸ்தானின் பரந்து விரிந்த கைபர் பக்துங்க்வா மகாணம், தெஹ்ரீக்-இ-தாலிபான் மற்றும் அதன் கூட்டணி கிளர்ச்சிக்குழுவின் கைகளுக்குச் சென்றிருப்பதால், பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டில் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்கள்படி, கிளர்ச்சியாளர்களின் வலையமைப்பு, துராந்த் கோட்டில் உள்ள பழங்குடிகளின் பெரும் பகுதியைக் கைப்பற்றியதோடு, பாகிஸ்தான் ராணுவம் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் மாற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், கைபர், குர்ராம், வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் மற்றும் பாஜாவூர் போன்றவை பதற்றமான மாவட்டங்களாக உள்ளன. அங்குத் தாலிபான்களுடன் இணைந்த குழுக்கள், தங்களது கட்டுப்பாட்டை அதிகாரத்தைப் பலப்படுத்தியிருப்பது பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. பெஷாவர் – கைபர் சாலை, ஹங்கு-குர்ராம் வழித்தடம், வசிரிஸ்தான் நோக்கிச் செல்லும் பன்னு-தேரா இஸ்மாயின் கான் பகுதி போன்ற முக்கிய பாதைகளைத் தங்களது.

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு, அங்கு வெளிப்படையாகவே சோதனைச் சாவடிகளை அமைத்திருப்பதாக வரும் தகவல்கள் உண்மையிலேயே பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது… ஆயுதங்களுடன் ரோந்தில் இருக்கும் போராளிகள், வாகனங்களை நிறுத்துவது, அடையாள அட்டைகளை ஆய்வு செய்வது, ஜிஹாத் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக நிதியை வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் பாகிஸ்தானை தடுமாற செய்துள்ளது.

கைபர் பக்துங்க்வா பகுதியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், தெஹ்ரீக்-இ-தாலிபான் ஊடகப்பிரிவு, போராளிகள் நெடுஞ்சாலைகளில் ரோந்து செல்வதையும், பொதுமக்களைத் தொடர்பு கொள்வதையும் காட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.. இது பாகிஸ்தானுக்கு சொந்தமான எல்லை மாகாணங்கள் பேராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கிராமப்புற பழங்குடி மண்டலங்களிலிருந்து பெஷாவர் நகர்ப்புற எல்லையை நோக்கித் தங்களது செல்வாக்கை அதிகரிப்பதே TTP-யின் அண்மைக்கால உத்தியாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக எல்லைப்படை, உள்ளூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, படாபர், மட்டானி, பாரா கோரியார்டகளை, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகப் போராளிக்குழுக்கள் கூறுகின்றன. அங்குப் போராளிக்குழுக்கள் தங்களது படைகளை நகர்த்துவதோடு, பாதுகாப்புக்கான பணத்தை சேமிப்பதாகவும், மாகாண தலைநகரிலிருந்து தாக்கும் தூரத்திற்குள் ஆயுதங்களைச் சேமித்து வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பாகிஸ்தான் மவுனம் காத்து வருகிறது. இது தீர்க்கமான எதிர் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குப் பதிலாகக் கட்டுப்பாட்டு அணுகுமுறையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.

பாகிஸ்தானின் தற்போது இக்கட்டான நிலைக்கும், 2021ம் ஆண்டு முன்னர், தாலிபான்கள் படிப்படியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்கும் இடையே பல ஒற்றுமைகளை உள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சோதனை சாவடிகள், பிரசார துண்டுபிரசுரங்கள் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கை என TTP-யின் எழுச்சியானது, போராளிக்குழுக்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையிலான கோட்டை மங்கலாக்கியுள்ளது. பாகிஸ்தான் விரைவில் கட்டுப்பாட்டை மீட்காவிட்டால், விரைவில் சரிவைச் சந்திக்கும் என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Tags: pakistanPakistan under severe pressure from TTP approaching Peshawar - Talibanதாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்தாலிபான்
ShareTweetSendShare
Previous Post

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Next Post

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies