தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்!
Oct 27, 2025, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

திமுகவின் தோல்வி நிச்சயம் - நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Oct 27, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது மறந்துவிட்டதா? மறைந்த திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 10 முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி (SIR) நடைபெற்றது முதல்வருக்குத் தெரியாததா என்ன? இப்படி ஆண்டாண்டு காலமாக நடக்கும் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையை ஏதோ புதிய முறை போல காட்சிப்படுத்த முயற்சிப்பது ஏன்? மேலும், திருத்தப் பணியில் ஈடுபடப்போகும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் தமிழக அரசின் கீழ் பணியாற்றுவோர் தான். அப்படி இருக்கையில் தமிழக அரசு அதிகாரிகளை நேர்மையற்றவர்கள் என்று சந்தேகிக்கிறதா திமுக அரசு?  என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகமாகியிருக்கும் வேளையில், அவர்கள் வாக்காளராக உருமாறுவதைத் தடுக்கத் தான் இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறதே தவிர தமிழக வாக்காளரை நீக்குவதற்கு அல்ல என்பது தங்களுக்கும் தெரியும். எனவே மழை வெள்ள பாதிப்புகள் தொடங்கி பயிர் கொள்முதல் செய்யாமை, தரமற்ற சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு, பள்ளிக்கரணை ஊழல் போன்ற திமுக அரசின் தவறுகளை மறைக்க SIR-ஐ கையில் எடுத்து, பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம். எவ்வளவு மடைமாற்றினாலும் மக்கள் எதையும் மறக்கவும் போவதில்லை, மனம் மாறப்போவதுமில்லை. திமுகவின் தோல்வி நிச்சயம் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: DMKMK Stalindmk stalinநயினார் நாகேந்திரன்Chief Minister Stalin is looking for a reason for the defeat right now - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

Next Post

காசா : பணயக் கைதிகள் உடல்களை தேடும் பணி தீவிரம்!

Related News

தூத்துக்குடி : ஊரில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை – 3 பேர் கைது!

அடுத்து நடக்கப்போவதை கணித்தால்தான் நிலைத்து நிற்கமுடியும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை!

நெல்லை தெருவில் விளைவிப்பது திமுகவின் சாதனை – சீமான் விமர்சனம்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

பெசன்ட் நகரில் உள்ள அறுபடை முருகன் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி தரிசனம்!

கனிமொழி முன்னிலையில் அதிருப்தியை வெளிப்படுத்திய திமுக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கான் எல்லையில் மீண்டும் வெடித்த மோதல் – பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

இமாச்சல பிரதேசம் : வானில் பறந்த பாராகிளைடர்களை கண்டு ரசித்த மக்கள்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் புளோரிடா மாகாணம்!

அமெரிக்காவின் பெண் அதிபர் பதவி ஏற்பது நிச்சயம் – கமலா ஹாரிஸ்

சீனா கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

டெல்லி : காற்று மாசால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட வாகன ஓட்டி!

புகழ்பெற்ற BTS பாடல் குழுவினர், அடுத்த ஆண்டு இந்தியா வருகை?

காலாட் படை தினம் – தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை!

பழனி ஆண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்!

அணுசக்தியால் இயங்கும் குரூஸ் ஏவுகணையை சோதித்த ரஷ்யா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies