கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகளை, மழை தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் செய்துவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாகக் கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், முனிச்சாலை, சிம்மக்கல், தெப்பக்குளம், தெற்குவாசல், நெல்பேட்டை என மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளின் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம், சிம்மக்கல் வரையிலும், மேலமடை பாண்டி கோயில் சுற்றுவழிச்சாலை பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலும் அப்பகுதி சாலைகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.

பருவமழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டிய சாலைப் பணிகள், மழைக்காலம் தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதால், பொதுமக்கள் உயிர் பயத்துடனே சாலையில் பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது போன்ற குண்டும், குழியுமான சாலைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படுவதாக ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களை இயக்குவோர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

மழைக்காலங்களில் கிடைக்கும் குறைந்த அளவு வருமானமும், வாகனங்களைப் பழுதுசெய்வதற்கே போதுமானதாக இல்லாத நிலையில், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சாலை வரியில் தொடங்கி அனைத்து விதமான வரிகளையும் உரிய நேரத்தில் பெறும் மதுரை மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும், மக்கள் பயணிக்க அடிப்படை வசதியானசாலையைக் கூடட முறையாமல்பராமரிக்கத் தவறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழும் அளவிற்குஅபாயகரமானதாகக் காட்சியளிக்கும் சாலைகளைஉடனடியாகச் சீரமைக்கக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: கடமையை மறந்த அதிகாரிகள்newsTodayஅச்சத்தில் வாகன ஓட்டிகள்Officials who forgot their duty: Motorists are afraid of dangerous roads
ShareTweetSendShare
Previous Post

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

Next Post

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies