கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
Jan 14, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகளை, மழை தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் செய்துவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாகக் கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், முனிச்சாலை, சிம்மக்கல், தெப்பக்குளம், தெற்குவாசல், நெல்பேட்டை என மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளின் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம், சிம்மக்கல் வரையிலும், மேலமடை பாண்டி கோயில் சுற்றுவழிச்சாலை பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலும் அப்பகுதி சாலைகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.

பருவமழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டிய சாலைப் பணிகள், மழைக்காலம் தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதால், பொதுமக்கள் உயிர் பயத்துடனே சாலையில் பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது போன்ற குண்டும், குழியுமான சாலைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படுவதாக ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களை இயக்குவோர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

மழைக்காலங்களில் கிடைக்கும் குறைந்த அளவு வருமானமும், வாகனங்களைப் பழுதுசெய்வதற்கே போதுமானதாக இல்லாத நிலையில், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சாலை வரியில் தொடங்கி அனைத்து விதமான வரிகளையும் உரிய நேரத்தில் பெறும் மதுரை மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும், மக்கள் பயணிக்க அடிப்படை வசதியானசாலையைக் கூடட முறையாமல்பராமரிக்கத் தவறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழும் அளவிற்குஅபாயகரமானதாகக் காட்சியளிக்கும் சாலைகளைஉடனடியாகச் சீரமைக்கக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: newsTodayஅச்சத்தில் வாகன ஓட்டிகள்Officials who forgot their duty: Motorists are afraid of dangerous roadsகடமையை மறந்த அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

Next Post

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies