கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
May 1, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகளை, மழை தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் செய்துவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாகக் கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், முனிச்சாலை, சிம்மக்கல், தெப்பக்குளம், தெற்குவாசல், நெல்பேட்டை என மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளின் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம், சிம்மக்கல் வரையிலும், மேலமடை பாண்டி கோயில் சுற்றுவழிச்சாலை பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலும் அப்பகுதி சாலைகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.

பருவமழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டிய சாலைப் பணிகள், மழைக்காலம் தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதால், பொதுமக்கள் உயிர் பயத்துடனே சாலையில் பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது போன்ற குண்டும், குழியுமான சாலைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படுவதாக ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களை இயக்குவோர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

மழைக்காலங்களில் கிடைக்கும் குறைந்த அளவு வருமானமும், வாகனங்களைப் பழுதுசெய்வதற்கே போதுமானதாக இல்லாத நிலையில், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சாலை வரியில் தொடங்கி அனைத்து விதமான வரிகளையும் உரிய நேரத்தில் பெறும் மதுரை மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும், மக்கள் பயணிக்க அடிப்படை வசதியானசாலையைக் கூடட முறையாமல்பராமரிக்கத் தவறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழும் அளவிற்குஅபாயகரமானதாகக் காட்சியளிக்கும் சாலைகளைஉடனடியாகச் சீரமைக்கக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: கடமையை மறந்த அதிகாரிகள்newsTodayஅச்சத்தில் வாகன ஓட்டிகள்Officials who forgot their duty: Motorists are afraid of dangerous roads
ShareTweetSendShare
Previous Post

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

Next Post

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

Related News

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்சனா பட்நாயக் ஆலோசனை!

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies