கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
Jun 16, 2026, 12:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகளை, மழை தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் செய்துவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாகக் கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், முனிச்சாலை, சிம்மக்கல், தெப்பக்குளம், தெற்குவாசல், நெல்பேட்டை என மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளின் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம், சிம்மக்கல் வரையிலும், மேலமடை பாண்டி கோயில் சுற்றுவழிச்சாலை பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலும் அப்பகுதி சாலைகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.

பருவமழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டிய சாலைப் பணிகள், மழைக்காலம் தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதால், பொதுமக்கள் உயிர் பயத்துடனே சாலையில் பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது போன்ற குண்டும், குழியுமான சாலைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படுவதாக ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களை இயக்குவோர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.

மழைக்காலங்களில் கிடைக்கும் குறைந்த அளவு வருமானமும், வாகனங்களைப் பழுதுசெய்வதற்கே போதுமானதாக இல்லாத நிலையில், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சாலை வரியில் தொடங்கி அனைத்து விதமான வரிகளையும் உரிய நேரத்தில் பெறும் மதுரை மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும், மக்கள் பயணிக்க அடிப்படை வசதியானசாலையைக் கூடட முறையாமல்பராமரிக்கத் தவறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழும் அளவிற்குஅபாயகரமானதாகக் காட்சியளிக்கும் சாலைகளைஉடனடியாகச் சீரமைக்கக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: கடமையை மறந்த அதிகாரிகள்newsTodayஅச்சத்தில் வாகன ஓட்டிகள்Officials who forgot their duty: Motorists are afraid of dangerous roads
ShareTweetSendShare
Previous Post

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

Next Post

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies