பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!
Jan 14, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் பணி அனுமதி விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிமாற்றங்கள், ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது தலைமையிலான நிர்வாகம் “அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதுகாப்பது என்ற பெயரில், வெளிநாட்டு பணியாளர்களின் நுழைவு மற்றும் வேலை அனுமதிகளில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கான H-1B விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், பல மாநிலங்களில் வெளிநாட்டு பணியாளர்களைப் பணியமர்த்த தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது EMPLOYMENT AUTHORISATION DOCUMENT எனப்படும் பணி அனுமதி ஆவணங்களுக்கான தானியங்கி நீட்டிப்பு முறையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் விரைவில் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

இதற்குத் தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் நலன் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதனை வெளிநாட்டவர்களின் திறமைகளை ஒதுக்கும் டிரம்பின் அரசியல் நடவடிக்கையாகப் பார்ப்பதாகப் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அமெரிக்க உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், வெளிநாட்டு பணியாளர்கள் அந்நாட்டில் பணியாற்றப் பெற்ற பணி அனுமதி ஆவணங்களின் தானியங்கி நீட்டிப்பு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆவணங்களை உடனடியாகப் புதுப்பித்துப் புதிய அனுமதியை பெறாத பணியாளர்கள், உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை அதிகாரிகள், பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு தானியங்கி நீட்டிப்பை நிறுத்துவது, “தேசிய பாதுகாப்பு” நோக்கில் அவசியமானது என விளக்கமளித்துள்ளனர். முன்னதாக விண்ணப்பங்கள் பரிசீலணையில் இருக்கும் காலகட்டத்திலும், பணியாளர்கள் 540 நாட்கள் வரை தங்கள் பணியைத் தொடர அனுமதி இருந்தது. ஆனால் தற்போதைய விதிமாற்றம் அந்த அனுமதிக்கும் முற்றுப்புள்ளி வைத்திருப்பது, வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகக் கிரீன்கார்டு மற்றும் விசா பிரச்னைகளில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் இந்த மாற்றத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக H-1B விசா வைத்துள்ள பணியாளர்கள், H-4 விசா வைத்துள்ள அவர்களின் துணைவியர்கள், OPT மற்றும் STEM OPT விசாவில் பயிலும் மாணவர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்கள் தங்கள் பணி அனுமதியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் EAD புதுப்பிப்பு செயல்முறைகள் தற்போது 3 முதல் 12 மாதங்கள்வரை நீள்வதால், அனுமதி முடிவடையும் முன் புதுப்பிப்பு கிடைக்காதவர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அக்டோபர் 30-ம் தேதிக்குள் தானாக நீட்டிக்கப்பட்ட அனுமதிகளுக்கு இந்த விதி பொருந்தாது எனவும், அதற்கு பிந்தைய அனைத்து புதுப்பிப்புகளும் கடுமையான பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் அமெரிக்க உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போதைய EAD அனுமதி காலவதியாவதற்கு 180 நாட்களுக்கு முன், புதிப்பிப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சிலர் முன்கூட்டியே விண்ணப்பித்தாலும் செயல்முறை தாமதம் காரணமாக அவர்கள் இடைக்கால பணி இழப்பைச் சந்திக்கும் வாய்ப்பும் உருவாகலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கிரீன் கார்டு பெற 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தியர்களுக்கு இந்தப் புதிய விதி கூடுதல் சுமையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், தொழில்நுட்பம், சுகாதாரம், ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் பங்கு வகித்து வரும் இந்திய பணியாளர்கள், இந்தப் புதிய நடைமுறைமூலம், பணி இடர்பாடுகள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களுக்கிடையே சிக்கி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Tags: usaDonald TrumpTrump administration cancels automatic extension of work permits: A rule change that has turned the lives of thousands of Indian workers upside down
ShareTweetSendShare
Previous Post

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

Next Post

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இன்று விளக்கம் அளிக்கிறேன் – செங்கோட்டையன்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies