பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 09:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் உட்பட வடமாநில இளைஞர்களை அவமதிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக தலைவர்கள், பிரதமர் மோடியின் திமுக குறித்த பேச்சை மடைமாற்றம் செய்து நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எப்போதெல்லாம் தனக்கும் தன் கட்சிக்கும் ஆபத்து வருகிறதோ அப்பொதெல்லாம் தமிழக மக்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்கள் கோமூத்திர மாநிலங்கள்… வட இந்தியர்கள் பன்றி போல பெருகுகின்றனர். வட இந்திய கலாச்சாரம் அருவருப்பானது. இந்தி படித்தவர்கள் தான் பானிபூரி விற்பதோடு கழிவறைகளை கழுவிக் கொண்டிருக்கின்றனர். வட மாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் இடையே பிரிவினையை தூண்டும் வகையில் திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வாயில் இருந்து உதிர்ந்த அவதூறுகள் தான் இவை.

இதற்கெல்லாம் மேலும் ஒரு படி சென்று, இந்தி பேசுவோரை தமிழகத்திற்குள் நுழைய விட மாட்டேன் எனப் பேசிய மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். வடமாநில மக்களை எவ்வளவு கீழ்த்தரமாகப் பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாகப் பேசிய திமுகவினர், தங்கள் கட்சிமீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமதித்துவிட்டதாகக் கூறி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. பீகாரில் உள்ள சக்கரா பகுதியில் மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்த பிரதமர் மோடி, வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு இண்டி கூட்டணி இழைத்துக் கொண்டிருக்கும் துரோகத்தைப் பட்டியலிட்டு பேசினார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் வெளிப்படையாகவே பீகார் மக்களை உள்ளே விடமாட்டேன் என பேசியபோது அருகில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததை சுட்டிக்காட்டிய மோடி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் பீகார் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துயரங்களையும் வேதனையுடன் பகிர்ந்தார்.

தமிழகத்தில் பணியாற்றி வரும் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குறித்து திமுக தலைவர்கள் பேசும் விதமும், நடத்தும் விதமும் பிரதமர் மோடியின் பேச்சின் மூலம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதோடு, தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பீகார் மக்களை துன்புறுத்திக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக எனும் ஒரு அரசியல்கட்சிமீதானன குற்றச்சாட்டை, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பிரதமர்அவமதித்துவிட்டதாகத் திசைதிருப்பும் வேலையில் திமுகவும் அதன் தலைவர்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தனக்கும், தன் கட்சிக்கும் எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ? அப்போதெல்லாம் திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றித் தப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிராகவும் மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் திமுக தலைவர்கள் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் கேள்விக்குறியாகியுள்ள சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, அனைத்து பகுதிகளிலும் தாரளமாகப் புழங்கும் போதைப் பொருட்கள், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமை, பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு போராட்டமும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அண்மைக்காலமாகவே அரசுப்பணி நியமனம் தொடங்கி நெல் கொள்முதல் வரை எழுந்திருக்கும் பலநூறு கோடி ரூபாய் ஊழலை மறைக்கவே பிரதமர் மோடியின் பேச்சை திரித்துப் பரப்பி, அரசு நிர்வாகத் தோல்வியை மடைமாற்றம் செய்யும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Tags: பீகார் மக்கள்PM ModiDMKCriticism about the people of Bihar: DMK's double role exposedbihar eletion 2025
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானின் முகமூடியை கிழித்தெறிந்த தலிபான் படைகள் : பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் வாக்குமூல வீடியோ வைரல்!

Next Post

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies