உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் - சிறப்பு தொகுப்பு!
Nov 3, 2025, 02:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 2, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சீரமைக்கக் கோரி மனு அளித்தால், வீட்டைவிட்டு வெளியேறுமாறு பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடனே வாழ வேண்டிய சூழலுக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த கட்டடங்களாலும், அடிக்கடி இடிந்து விழும் மேற்கூரைகளாலும் குடியிருப்புவாசிகள் வசிக்கவே அச்சப்படக்கூடிய வகையில் காட்சியளிக்கும் இந்த பாழடைந்த கட்டடம் தான் மதுரையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 55 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட செண்பகத் தோட்டம் குடியிருப்பு. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய விளிம்பு நிலை மக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் சிமெண்ட் காரைகள் முழுவதுமாக உதிர்ந்து கம்பிகள் அனைத்தும் எலும்புக் கூடுகள் போல காட்சியளிக்கின்றன.

செண்பகத் தோட்ட குடியிருப்பு மட்டுமல்ல, மதுரை மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது. நெல்பேட்டையில் அமைந்துள்ள குடியிருப்பில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் பலி, கடந்த நான்காம் தேதி வண்டியூர் யாகப்பா நகரில் இருக்கும் குடியிருப்பு சரிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலி என கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாடி படிகளில் உள்ள பால்கனிகள் மற்றும் கைப்பிடிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காட்சியளிப்பதோடு, மாடிப் படியையே முங்கில் கம்பு கொண்டு முட்டு கொடுத்திருக்கும் காட்சி பார்க்கும் போதே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. முழுவதும் சேதமடைந்து பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புணரமைக்க கோரிக்கை வைக்க சென்ற மக்களிடம், வீடுகளை காலி செய்ய பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது குடியிருப்புவாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் இந்த குடியிருப்பில் ஒவ்வொரு இரவையும் கழிக்கவே பெரும் போராட்டமாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே சேதமடைந்த கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Tamil Nadu Housing BoardMaduraiHousing Board flatsSenbhaga Thottam flat
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

Next Post

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

Related News

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies