உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சீரமைக்கக் கோரி மனு அளித்தால், வீட்டைவிட்டு வெளியேறுமாறு பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடனே வாழ வேண்டிய சூழலுக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த கட்டடங்களாலும், அடிக்கடி இடிந்து விழும் மேற்கூரைகளாலும் குடியிருப்புவாசிகள் வசிக்கவே அச்சப்படக்கூடிய வகையில் காட்சியளிக்கும் இந்த பாழடைந்த கட்டடம் தான் மதுரையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 55 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட செண்பகத் தோட்டம் குடியிருப்பு. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய விளிம்பு நிலை மக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் சிமெண்ட் காரைகள் முழுவதுமாக உதிர்ந்து கம்பிகள் அனைத்தும் எலும்புக் கூடுகள் போல காட்சியளிக்கின்றன.

செண்பகத் தோட்ட குடியிருப்பு மட்டுமல்ல, மதுரை மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது. நெல்பேட்டையில் அமைந்துள்ள குடியிருப்பில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் பலி, கடந்த நான்காம் தேதி வண்டியூர் யாகப்பா நகரில் இருக்கும் குடியிருப்பு சரிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலி என கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாடி படிகளில் உள்ள பால்கனிகள் மற்றும் கைப்பிடிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காட்சியளிப்பதோடு, மாடிப் படியையே முங்கில் கம்பு கொண்டு முட்டு கொடுத்திருக்கும் காட்சி பார்க்கும் போதே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. முழுவதும் சேதமடைந்து பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புணரமைக்க கோரிக்கை வைக்க சென்ற மக்களிடம், வீடுகளை காலி செய்ய பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது குடியிருப்புவாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் இந்த குடியிருப்பில் ஒவ்வொரு இரவையும் கழிக்கவே பெரும் போராட்டமாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே சேதமடைந்த கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: MaduraiHousing Board flatsSenbhaga Thottam flatTamil Nadu Housing Board
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

Next Post

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies