உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் - சிறப்பு தொகுப்பு!
Jun 14, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சீரமைக்கக் கோரி மனு அளித்தால், வீட்டைவிட்டு வெளியேறுமாறு பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடனே வாழ வேண்டிய சூழலுக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த கட்டடங்களாலும், அடிக்கடி இடிந்து விழும் மேற்கூரைகளாலும் குடியிருப்புவாசிகள் வசிக்கவே அச்சப்படக்கூடிய வகையில் காட்சியளிக்கும் இந்த பாழடைந்த கட்டடம் தான் மதுரையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 55 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட செண்பகத் தோட்டம் குடியிருப்பு. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய விளிம்பு நிலை மக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் சிமெண்ட் காரைகள் முழுவதுமாக உதிர்ந்து கம்பிகள் அனைத்தும் எலும்புக் கூடுகள் போல காட்சியளிக்கின்றன.

செண்பகத் தோட்ட குடியிருப்பு மட்டுமல்ல, மதுரை மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது. நெல்பேட்டையில் அமைந்துள்ள குடியிருப்பில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் பலி, கடந்த நான்காம் தேதி வண்டியூர் யாகப்பா நகரில் இருக்கும் குடியிருப்பு சரிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலி என கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாடி படிகளில் உள்ள பால்கனிகள் மற்றும் கைப்பிடிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காட்சியளிப்பதோடு, மாடிப் படியையே முங்கில் கம்பு கொண்டு முட்டு கொடுத்திருக்கும் காட்சி பார்க்கும் போதே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. முழுவதும் சேதமடைந்து பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புணரமைக்க கோரிக்கை வைக்க சென்ற மக்களிடம், வீடுகளை காலி செய்ய பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது குடியிருப்புவாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் இந்த குடியிருப்பில் ஒவ்வொரு இரவையும் கழிக்கவே பெரும் போராட்டமாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே சேதமடைந்த கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Tamil Nadu Housing BoardMaduraiHousing Board flatsSenbhaga Thottam flat
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

Next Post

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies