உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் - சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சீரமைக்கக் கோரி மனு அளித்தால், வீட்டைவிட்டு வெளியேறுமாறு பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடனே வாழ வேண்டிய சூழலுக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த கட்டடங்களாலும், அடிக்கடி இடிந்து விழும் மேற்கூரைகளாலும் குடியிருப்புவாசிகள் வசிக்கவே அச்சப்படக்கூடிய வகையில் காட்சியளிக்கும் இந்த பாழடைந்த கட்டடம் தான் மதுரையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 55 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட செண்பகத் தோட்டம் குடியிருப்பு. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய விளிம்பு நிலை மக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் சிமெண்ட் காரைகள் முழுவதுமாக உதிர்ந்து கம்பிகள் அனைத்தும் எலும்புக் கூடுகள் போல காட்சியளிக்கின்றன.

செண்பகத் தோட்ட குடியிருப்பு மட்டுமல்ல, மதுரை மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது. நெல்பேட்டையில் அமைந்துள்ள குடியிருப்பில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் பலி, கடந்த நான்காம் தேதி வண்டியூர் யாகப்பா நகரில் இருக்கும் குடியிருப்பு சரிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலி என கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாடி படிகளில் உள்ள பால்கனிகள் மற்றும் கைப்பிடிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காட்சியளிப்பதோடு, மாடிப் படியையே முங்கில் கம்பு கொண்டு முட்டு கொடுத்திருக்கும் காட்சி பார்க்கும் போதே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. முழுவதும் சேதமடைந்து பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புணரமைக்க கோரிக்கை வைக்க சென்ற மக்களிடம், வீடுகளை காலி செய்ய பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது குடியிருப்புவாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் இந்த குடியிருப்பில் ஒவ்வொரு இரவையும் கழிக்கவே பெரும் போராட்டமாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே சேதமடைந்த கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Tamil Nadu Housing BoardMaduraiHousing Board flatsSenbhaga Thottam flat
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

Next Post

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies