கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!
Jul 30, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குளறுபடிகளால் டன் கணக்கிலான நெல் மணிகள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் முழுமையாக வீணாகும் முன்பே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் உட்பட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதியின்மை, உபகரணங்கள் மற்றும் வேலை ஆட்கள் தட்டுப்பாடு போன்ற குளறுபடிகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் அதிகமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், அங்கு நெல் மணிகளையும் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைக்க உரிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் முழுமையாகவும், முறையாகவும் கொள்முதல் செய்யப்படாத காரணத்தினால் பல டன் நெல் மணிகள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன

அரும்பாடு விளைவித்த நெல்மணிகளை கொள்முதல் செய்யாததன் விளைவாக விவசாயிகள் அனைவரும் இரவு பகல் பாராமல் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிக்கு காவல் காக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உரிய நேரத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

20 முதல் 30 நாட்களாக சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் நெல் மணிகள் ஒருபுறம் மழை மறுபுறம் வெயில் என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே பல்வேறு இன்னல்களை சந்தித்து விவசாயத்தை தொடர்ந்து வரும் நிலையில், இனியும் காலம் தாழ்த்தாமல் அனைத்து விவசாயிகளின் நெல்மூட்டைகளையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: paddy procurement centres00 government direct paddy procurement centresKallanai Roadtrichypaddy grainspaddy grains wastepaddy bundles
ShareTweetSendShare
Previous Post

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies