முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது - எல். முருகன் குற்றச்சாட்டு !
Mar 19, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் மிகப்பெரும் சீரழிவை சந்தித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவை சர்வதேச விமான நிலையப் பகுதியில், கல்லூரி மாணவி ஒருவரை மூன்று சமூகவிரோதிகள் இணைந்து கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியிருப்பது மிகுந்த அதிர்ச்சி மற்றும் வருத்தத்தை அளிக்கிறது.

தமிழகத்தில் பெண்கள் மீதான கொடூர குற்றங்கள் சிறிதளவும் குறைந்தபாடில்லை என்பதற்கு உதாரணமாக, தற்போது கோவையில் இப்படியானதொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாள்தோறும் பல்லாயிரம் பேர் உபயோகித்து வரக்கூடிய இந்த கோவை சர்வதேச விமானப் நிலையப் பகுதியைச் சுற்றிலும், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தின் மிகவும் முக்கியமான இப்பகுதியில், இளம்பெண் ஒருவர் மீது நடைபெற்றுள்ள இந்தப் பாலியல் வன்முறையானது, தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துகிறது.

ஆளும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும், தங்களுடைய சுயநலத்திற்காகவும் காவல்துறையின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திக் கொண்டு, பொது மக்களின் பாதுகாப்பை இந்த திமுக அரசின் காவல்துறை கேள்விக்குறியாக்கியுள்ளது. சர்வதேச அளவிலான காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட நமது காவல்துறை, தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் மிகப்பெரும் சீரழிவை சந்தித்து வருகிறது என்பது வேதனைக்குரிய உண்மையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு கடவுள் துணையிருக்க வேண்டிக்கொள்வதோடு, மாணவிக்கு தேவையான சிகிச்சை மற்றும் இழப்பீட்டை வழங்கிட வேண்டுமென்று தமிழக அரசை கடுமையாக வலியுறுத்துகிறேன். மேலும், இக்குற்றத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள், எவ்வித பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.

Tags: DMKMK StalinTamil Nadu is facing a great deterioration under Chief Minister Stalin's rule - L. Murugan alleges
ShareTweetSendShare
Previous Post

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

Next Post

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies