தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

ஜல்லி கற்களில் சிக்கி காற்றில் கலந்த மரண ஓலங்கள்!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் அரசு பேருந்தும், ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 20 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள விகாராபாத் பேருந்து பணிமனையில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தில், சுமார் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். பேருந்து ரங்கா ரெட்டி மாவட்டம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்த் திசையில் எதிர்பாராதவிதமாக ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கியது.

மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கி, முதல் 6 வரிசைகளில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரும் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், லாரியில் இருந்த ஜல்லி கற்கள் முழுவதும் பேருந்தினுள் சரிந்து விழுந்ததால் அதிலிருந்த பயணிகளின் நிலைமை மேலும் கவலைக்கிடமானது. ஒரு சிலர் ஜல்லி கற்களுக்குள் புதையுண்டு வலியாலும், வேதனையாலும் உதவிகோரி துடித்த காட்சி காண்போரைக் கண்கலங்க செய்தது.

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசாரும், மருத்துவ குழுவினரும் 3 ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன், பேருந்தை இரண்டு துண்டாக வெட்டி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கிரேவல் கற்களுக்குள் புதையுண்டவர்களை வெளியே எடுப்பதில் பல சிக்கல்கள் நிலவியதால், மீட்பு பணிகள் பலமணி நேரம் நீடித்தது. இதனால் ஹைதராபாத் – பீஜாப்பூர்  சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 10 பெண்கள், 10 மாத குழந்தை உட்பட 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்பர் லாரி அதிவேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரித்துள்ள அதிகாரிகள், விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய சிலர் செவெல்லா அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஹைதராபாத் ஓஸ்மானியா மற்றும் காந்தி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சையும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விபத்து சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தெலங்கானா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் கோர விபத்து, சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அதிகரித்துள்ளது.

Tags: lorry accidentதெலங்கானாlorry accident todayA horrific accident in Telangana claimed the lives of 20 people
ShareTweetSendShare
Previous Post

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

Next Post

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies