டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!
Mar 15, 2026, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2025, 06:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவுக்கான முதல் தூதரைத் தாலிபான் அரசு நியமித்துள்ளது. இந்த நியமனம் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1990களில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரம் தாலிபன்கள் கையில் வந்தபோது அவர்களின் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. ஆனால், 2021ம் ஆண்டு, மீண்டும் தலிபான்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் வந்தபிறகு, நிலைமை முற்றிலுமாக மாறியது. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களில் தாலிபன்களின் புதிய தூதர்களின் நியமனங்களை ஏற்க மறுத்துவிட்டன.

சில நாடுகளில் மட்டுமே தாலிபன்களால் நியமிக்கப்பட்ட தூதரக அதிகாரிகளுடன் ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேசஅளவில் ரஷ்யா மட்டுமே தலிபன்களை அங்கீகரித்துள்ள ஒரே நாடாக உள்ளது.

தலிபான்கள் தலைமையிலான ஆப்கான் அரசுடன் இந்தமுறை இந்தியா புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப நடைமுறைச் சார்ந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. அளவான தொடர்பை மேற்கொண்டது.

தலிபான்களின் ஆட்சியையும் அந்நாட்டின் புதிய கொடியையும் அங்கீகரிக்காத இந்தியா, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அரசு அந்நாட்டில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காபூலில் இயங்கி வந்த தனது தூதரகத்தை இந்தியா தற்காலிகமாக மூடியது. 2022ஆம் ஆண்டு, மனிதாபிமான உதவிகளுக்கான ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்பிய இந்தியா, ஆப்கானிஸ்தானில் தனது தூதரக இருப்பை மீண்டும் ஏற்படுத்தியது.

2021-க்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அணைகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் போன்ற பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வரும் தாலிபான்களுக்கு நாட்டின் நலத் திட்டங்களைச் செயல்படுத்த மேலும் நிதியுதவி தேவைப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்க் கான் முத்தாகி முதல்முறையாக இந்தியாவுக்கு வந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வலிமையை நோக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜெய்சங்கர்  குறிப்பிட்ட நிலையில் இந்தியாவை “நெருங்கிய நண்பர்” என அழைத்த அமீர்கான் முத்தாகி, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யமாறு இந்திய தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாகக் கூறிய அமீர்கான் முத்தாகி, இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதத்தை ஆப்கான் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு, காபூலில் இயங்கி வந்த இந்திய தூதரகம் மீண்டும் தூதரகப் பணிகளை மேற்கொள்ளும் என்று மத்திய அரசால் அறிவிக்கப் பட்டது. மேலும் இந்தியாவுக்கான தலிபான் அரசின் தூதர்களை ஏற்றுக்கொள்ளவும் இந்தியா ஒப்புக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் இது புதிய திருப்பமாக இது பார்க்கப் பட்டது.

தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை ஆப்கானிஸ்தானில் விரிவுபடுத்த சீனா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. சீனா அல்லது பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்குள் முழுமையாக ஆப்கானிஸ்தான் செல்வதை இந்தியா விரும்பவில்லை.

தங்கள் ஆட்சிக்குச் சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் பணியாற்றி வரும் தலிபான்கள் ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கும் நிலையை விரும்பவில்லை. எனவே இந்தியாவுடனான உறவைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்படுத்தி வருகிறது.

16 டன்களுக்கும் அதிகமான நோய் எதிர்ப்பு மருந்துகளை ஆஃப்கனிஅதான் மக்களுக்காக இந்தியா உதவியுள்ளதாகக் கூறியுள்ள தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர், இருநாடுகளுக்கான நீண்டகால உறவை இது பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இப்படி மனிதாபிமான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம், ஆப்கானிஸ்தானில் சுகாதாரம், ஸ்திரத்தன்மை மற்றும் மேம்படுத்துவதில் நம்பகமான நண்பர் என்பதை மீண்டும் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆப்கான் தூதரகத்துகான புதிய தூதரை தலிபான் அரசு நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்தியா ஒப்புக்கொண்டிருப்பது, மத்திய அரசின் மிகப்பெரிய ராஜ தந்திரம் என்று பாராட்டப்படுகிறது.

Tags: IndiaAfghanistanதாலிபான்Appointment of Taliban envoy in Delhi: India praises and rejects the Taliban
ShareTweetSendShare
Previous Post

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

Next Post

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies