டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2025, 06:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவுக்கான முதல் தூதரைத் தாலிபான் அரசு நியமித்துள்ளது. இந்த நியமனம் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1990களில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரம் தாலிபன்கள் கையில் வந்தபோது அவர்களின் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. ஆனால், 2021ம் ஆண்டு, மீண்டும் தலிபான்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் வந்தபிறகு, நிலைமை முற்றிலுமாக மாறியது. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களில் தாலிபன்களின் புதிய தூதர்களின் நியமனங்களை ஏற்க மறுத்துவிட்டன.

சில நாடுகளில் மட்டுமே தாலிபன்களால் நியமிக்கப்பட்ட தூதரக அதிகாரிகளுடன் ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேசஅளவில் ரஷ்யா மட்டுமே தலிபன்களை அங்கீகரித்துள்ள ஒரே நாடாக உள்ளது.

தலிபான்கள் தலைமையிலான ஆப்கான் அரசுடன் இந்தமுறை இந்தியா புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப நடைமுறைச் சார்ந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. அளவான தொடர்பை மேற்கொண்டது.

தலிபான்களின் ஆட்சியையும் அந்நாட்டின் புதிய கொடியையும் அங்கீகரிக்காத இந்தியா, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அரசு அந்நாட்டில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காபூலில் இயங்கி வந்த தனது தூதரகத்தை இந்தியா தற்காலிகமாக மூடியது. 2022ஆம் ஆண்டு, மனிதாபிமான உதவிகளுக்கான ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்பிய இந்தியா, ஆப்கானிஸ்தானில் தனது தூதரக இருப்பை மீண்டும் ஏற்படுத்தியது.

2021-க்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அணைகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் போன்ற பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வரும் தாலிபான்களுக்கு நாட்டின் நலத் திட்டங்களைச் செயல்படுத்த மேலும் நிதியுதவி தேவைப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்க் கான் முத்தாகி முதல்முறையாக இந்தியாவுக்கு வந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வலிமையை நோக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜெய்சங்கர்  குறிப்பிட்ட நிலையில் இந்தியாவை “நெருங்கிய நண்பர்” என அழைத்த அமீர்கான் முத்தாகி, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யமாறு இந்திய தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாகக் கூறிய அமீர்கான் முத்தாகி, இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதத்தை ஆப்கான் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு, காபூலில் இயங்கி வந்த இந்திய தூதரகம் மீண்டும் தூதரகப் பணிகளை மேற்கொள்ளும் என்று மத்திய அரசால் அறிவிக்கப் பட்டது. மேலும் இந்தியாவுக்கான தலிபான் அரசின் தூதர்களை ஏற்றுக்கொள்ளவும் இந்தியா ஒப்புக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் இது புதிய திருப்பமாக இது பார்க்கப் பட்டது.

தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை ஆப்கானிஸ்தானில் விரிவுபடுத்த சீனா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. சீனா அல்லது பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்குள் முழுமையாக ஆப்கானிஸ்தான் செல்வதை இந்தியா விரும்பவில்லை.

தங்கள் ஆட்சிக்குச் சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் பணியாற்றி வரும் தலிபான்கள் ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கும் நிலையை விரும்பவில்லை. எனவே இந்தியாவுடனான உறவைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்படுத்தி வருகிறது.

16 டன்களுக்கும் அதிகமான நோய் எதிர்ப்பு மருந்துகளை ஆஃப்கனிஅதான் மக்களுக்காக இந்தியா உதவியுள்ளதாகக் கூறியுள்ள தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர், இருநாடுகளுக்கான நீண்டகால உறவை இது பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இப்படி மனிதாபிமான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம், ஆப்கானிஸ்தானில் சுகாதாரம், ஸ்திரத்தன்மை மற்றும் மேம்படுத்துவதில் நம்பகமான நண்பர் என்பதை மீண்டும் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆப்கான் தூதரகத்துகான புதிய தூதரை தலிபான் அரசு நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்தியா ஒப்புக்கொண்டிருப்பது, மத்திய அரசின் மிகப்பெரிய ராஜ தந்திரம் என்று பாராட்டப்படுகிறது.

Tags: IndiaAfghanistanதாலிபான்Appointment of Taliban envoy in Delhi: India praises and rejects the Taliban
Share
Tweet
SendShare
Previous Post

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

Next Post

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies