காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் - விதிமுறைகளை மீறி அராஜகம்!
Nov 5, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

Web Desk by Web Desk
Nov 4, 2025, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காவிரி ஆற்றங்கரையிலும், மின் மயானத்திலும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விதிமுறைகளை மீறி கொட்டப்படும் குப்பைகள் குறித்து பலமுறைப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 12 வார்டுகளை உள்ளடக்கிய பள்ளிப்பாளையம் நகராட்சியின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த சில சிலமாதங்களாகவே சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் காவிரி ஆற்றின் அருகே உள்ள கால்வாய் மற்றும் மயானத்தில் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கால்வாய்களில் கொட்டப்படும் குப்பைகளால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுத் துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நகராட்சி நல அலுவலரிடம் பலமுறைப் புகார் அளித்தும், தமக்கும் இந்தச் செயலுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாதது போல நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதோடு மயான பூமியில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றியுள்ள குடியிருப்புகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைக் கழிவுகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது குப்பைகளால் எரிப்பதில் இருந்து வெளிவரும் புகைக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் கொட்டப்படும் குப்பைகளை முறையாகத் திடக்கழிவு திட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறி, ஆற்றங்கரையிலும் மின் மயானத்திலும் கொட்டிவரும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: பள்ளிப்பாளையம் நகராட்சிநாமக்கல்அராஜகம்Garbage dumped on the banks of the Cauvery River - anarchy in violation of regulationsகொட்டப்படும் குப்பைகள்
ShareTweetSendShare
Previous Post

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

Next Post

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Related News

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies