முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் - நயினார் நாகேந்திரன்
Aug 7, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Nov 5, 2025, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தமிழக பாஜக தொகுதி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயிலரங்கு கூட்டம் நடைபெற்றது.

இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பயிலரங்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொருளாளர் பைஜயந்த் பாண்டா, மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி வெற்றி பெற தாம் உழைக்க வேண்டும் என்று கூறினார். உதயநிதியை முதலமைச்சராக்கும் முயற்சியில் திமுக கூட்டணி ஈடுபட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கவும், ஊழலை ஒழிக்கவும், மாற்றம் தேவை என்கிற சூழலில் உள்ளதாகக் கூறினார்.

திமுக கூட்டணி இந்த முறை போலி வாக்காளர்களை வைத்துக் கொண்டு 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அதனைச் சாத்தியமற்றதாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அடுத்து எப்போது நடக்க போகிறது என்று தெரியவில்லை எனவும், அதனால் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாக நடைபெறுவதே தமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், அடுத்த 100 நாட்கள் பாஜக மற்றும் தமிழகத்தில் முக்கியமான நாட்கள் என்றும் தெரிவித்தார்.

Tags: நயினார் நாகேந்திரன்9 thousands fake voters in the Chief Minister's constituency - Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

Next Post

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Related News

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies