பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!
Jan 14, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

அரசின் பொது பாதுகாப்பு நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

Murugesan M by Murugesan M
Nov 6, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 3 மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல நக்சலைட்டான சுனிதா ஓயம், தனது ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளார்.

ஏறக்குறைய 5 அடி உயரம் கொண்ட 23 வயது பெண்மணியான சுனிதா ஓயம் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு பிரபல நக்சலைட் ஆவார். மாலாஜ்காண்ட் – தர்ரேகாசா தளத்தின் AREA COMMITTEE உறுப்பினராகச் செயல்பட்டு வந்த இவரது தலைக்கு 3 மாநில போலீசாரும் 14 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நவீன ரக INSAS துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு நேரடியாகப் பாலாகட் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த சுனிதா ஓயம், அங்கிருந்த பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்த சுனிதா, தனது குடும்பத்தினருடனான தொடர்பை இழந்ததையடுத்து பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாகச் சரணடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்னர் சுனிதா ஓயமை நக்சல் இயக்கத்தினர் கடத்திச் சென்றதாக அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நக்சல் இயக்கத்தினரால் மூளைச்சலவை செய்யப்பட்ட சுனிதா, நக்சல் குழுவின் பாதுகாப்பு படையில் இணைந்து AREA COMMITTEE உறுப்பினர் பொறுப்பிற்கு உயர்ந்திருந்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி சரணடைய முடிவெடுத்த சுனிதா ஓயம், தனது துப்பாக்கி மற்றும் உடைமைகளுடன், HAWK FORCE-ன் முகாமை அடைந்தார்.

அப்போது அவரது துப்பாக்கி, 3 மேகசின்கள், 30 குண்டுகள் மற்றும் ஒரு UBGL ஷெல் ஆகியவற்றை பாதுகாப்பு படையினரிடம் அவர் ஒப்படைத்தார். இந்நிலையில், சரணடைந்த சுனிதாவுக்கு உதவித்தொகையாக 20 லட்சமும், வீட்டு உதவிக்காக ஒன்றரை லட்சமும், திருமண உதவிக்காக 50 ஆயிரமும், கல்வி உதவிக்காக ஒன்றரை லட்சமும் வழங்க மத்தியப்பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் செயல்பாட்டில் இருந்த நக்சலைட் ஒருவர் பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாகச் சரணடைவது, கடந்த 33 ஆண்டுகளில் இதுவே முதல் முறை எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பொது பாதுகாப்பு நடவடிக்கையின் வெற்றியாகக் கருதும் மாநில அரசு, பிற நக்சல் உறுப்பினர்களையும் ஆயுத போராட்டத்தைக் கைவிட்டு விரைந்து சரணடைய அறிவுறுத்தியுள்ளது.

Tags: மத்தியப்பிரதேசம்Naxalite surrenders voluntarily to security forcesசரணடைந்த நக்சலைட்Naxalite surrenderபாதுகாப்பு படை
ShareTweetSendShare
Previous Post

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies