பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Nov 7, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 7, 2025, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்  என பாஜக தேசிய பொதுக்கழு  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரோடு மாவட்டம், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் மேற்கு மதில்சுவர் அருகே, திருக்கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரடியில், வரும் 14.11.2025 முதல் 12.01.2026 வரை 60 நாட்கள், தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து கொள்ளும் உரிமத்திற்கான பொது ஏலம்/டெண்டர், ரூ. 16 லட்சத்திற்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஏலத்திற்கான நிபந்தனைகளில், 3 ஆவது நிபந்தனையாக, ஏலம் எடுத்தவரே உரிமத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஏலத்தைக் கைப்பற்றியுள்ள பவானி திமுக நகரச் செயலாளருக்கு வேண்டப்பட்ட திமுகவினர், இங்குள்ள 34க்கும் மேற்பட்ட கடைகளை, ஒரு கடைக்கு 80,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்வாடகைக்கு விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், திருக்கோயிலுக்கு சுமார் ரூ. 20 லட்சத்துக்கும் மேல், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. வெறும் ரூ. 16 லட்சத்துக்கு ஏலம் கொடுத்துவிட்டு, விதிமுறைகளை மீறி, திமுகவினர் சுமார் 34 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்காக மட்டுமே இந்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் கொள்ளையும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீதே சுமத்தப்படும். திமுக ஆட்சியில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை, முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதே தவிர, ஆலய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.

அறநிலையத்துறை அமைச்சருக்கு, தனது துறையின் முறைகேடுகளைக் கவனிக்க நேரமில்லை. கட்சியில் யார் பெரியவர் என்ற போட்டியில் மட்டுமே கவனமிருக்கிறது. உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும் என்ற ஏல நிபந்தனைகளின்படி, உடனடியாக, பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் ஏலத்தை ரத்து செய்து மறு ஏலம் விட வேண்டும் என்றும், அறநிலையத் துறையை திமுகவினர் கொள்ளையடிக்கும் துறையாக மாற்றியிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: Annamalai Press Meetbjp annamalai latestBhavani Sangameshwarar Templetemporary shop auctionbjp annamalaiannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

Next Post

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

Related News

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies