அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூடத் திமுக அரசு Total Failure ஆக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்றும், இம்மாத்திற்கு எட்டாயிரத்து 722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்குத் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டதாகவும், திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆகத் திமுக அரசு இருப்பதாகவும், உடனடியாக ரேஷன் கடைகளுக்குக் கோதுமை சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















