அடுத்தடுத்து புயல்கள் - ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!
Mar 19, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி புயலை தொடர்ந்து உருவான ஃபங்-வோங் புயல் தற்போது கரையை கடந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

அண்மையில் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளை முற்றிலும் உருக்குலைத்தது. கடுமையான வெள்ளப்பெருக்கால் பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கின. புயல் பாதிப்பு காரணமாகச் சுமார் 5 லட்சம் மக்கள், வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி புயல் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 109 பேர் மாயமானதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும், அந்தப் புயலை தேசிய பேரிடராகவும் அறிவித்தது. இப்படி பெரும் சேதத்தை ஏற்படுத்திய கல்மேகி புயல் 2 நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது.

இதனால், பிலிப்பைன்ஸ் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், அந்த நிம்மதி பெருமூச்சு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்குள்ளாகவே, பிலிப்பைன்ஸை மற்றொரு சக்தி வாய்ந்த புயல் தாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஃபங்-வோங் எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் எனவும், குறைந்தது 5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் ஒரு புயலை எதிர்கொள்ள அந்நாட்டு அரசும், மக்களும் தயாராகினர். பிகோல் பகுதியில் அதிகபட்சமாக 200 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டதால், அங்குத் தேசிய மீட்புப்படை வீரர்கள் நூற்றுக்கணக்கில் முகாமிட்டனர். மறுஎச்சரிக்கை வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லச் செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்களுக்கும் கடல்பகுதிகளுக்கு செல்வதை தடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

ஃபங்-வோங் புயல் காரணமாகப் பிலிப்பைன்சின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அத்துடன், தென்கிழக்கு லூசோன் பகுதிக்கு 5ம் எண் எச்சரிக்கையும், மணிலா உள்ளிட்ட பகுதிகளுக்கு 3ம் எண் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Fung-wong புயல் கரையை நெருங்க நெருங்க 185 கிமீ முதல் 230 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசியதால் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. கல்மேகி புயலின்போது ஏற்பட்டதை போலவே, பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பலத்த காற்று காரணமாக, கிழக்கு விசயாஸின் பகுதிகளில் உள்ள பல இடங்களில் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் Fung-wong புயல் ஒரு வழியாகக் கரையை கடந்தது. இந்தப் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு நிலவரம்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Tags: ஆடிப்போன பிலிப்பைன்ஸ்A series of storms - the Philippines is devastated!
ShareTweetSendShare
Previous Post

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

Next Post

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies