அடுத்தடுத்து புயல்கள் - ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!
Jun 23, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி புயலை தொடர்ந்து உருவான ஃபங்-வோங் புயல் தற்போது கரையை கடந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

அண்மையில் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளை முற்றிலும் உருக்குலைத்தது. கடுமையான வெள்ளப்பெருக்கால் பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கின. புயல் பாதிப்பு காரணமாகச் சுமார் 5 லட்சம் மக்கள், வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி புயல் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 109 பேர் மாயமானதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும், அந்தப் புயலை தேசிய பேரிடராகவும் அறிவித்தது. இப்படி பெரும் சேதத்தை ஏற்படுத்திய கல்மேகி புயல் 2 நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது.

இதனால், பிலிப்பைன்ஸ் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், அந்த நிம்மதி பெருமூச்சு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்குள்ளாகவே, பிலிப்பைன்ஸை மற்றொரு சக்தி வாய்ந்த புயல் தாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஃபங்-வோங் எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் எனவும், குறைந்தது 5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் ஒரு புயலை எதிர்கொள்ள அந்நாட்டு அரசும், மக்களும் தயாராகினர். பிகோல் பகுதியில் அதிகபட்சமாக 200 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டதால், அங்குத் தேசிய மீட்புப்படை வீரர்கள் நூற்றுக்கணக்கில் முகாமிட்டனர். மறுஎச்சரிக்கை வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லச் செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்களுக்கும் கடல்பகுதிகளுக்கு செல்வதை தடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

ஃபங்-வோங் புயல் காரணமாகப் பிலிப்பைன்சின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அத்துடன், தென்கிழக்கு லூசோன் பகுதிக்கு 5ம் எண் எச்சரிக்கையும், மணிலா உள்ளிட்ட பகுதிகளுக்கு 3ம் எண் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Fung-wong புயல் கரையை நெருங்க நெருங்க 185 கிமீ முதல் 230 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசியதால் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. கல்மேகி புயலின்போது ஏற்பட்டதை போலவே, பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பலத்த காற்று காரணமாக, கிழக்கு விசயாஸின் பகுதிகளில் உள்ள பல இடங்களில் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் Fung-wong புயல் ஒரு வழியாகக் கரையை கடந்தது. இந்தப் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு நிலவரம்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Tags: ஆடிப்போன பிலிப்பைன்ஸ்A series of storms - the Philippines is devastated!
ShareTweetSendShare
Previous Post

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

Next Post

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies