தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கையில், ஒடிஷா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய தங்க சுரங்கம் ஏற்படுத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிஷாவின் தியோகார், கோஞ்சார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 685 கிலோ கச்சா தங்கக்கட்டிகளை இந்திய புவியியல் ஆய்வமைப்பான ஜி.எஸ்.ஐ., கண்டறிந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் கண்டறியப்பட்டுள்ள பகுதியில், லட்சக்கணக்கான டன் கச்சா தங்கக் கட்டிகள் கிடைக்கலாம் என்றும், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் தனியார் இடத்தில், 750 கிலோ தங்கம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தைக் கண்டு வரும் நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள தங்க சுரங்கங்களால், அன்னியச் செலாவணி அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















