S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!
Jan 14, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம், முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

நாடு முழுவதும் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி இருக்கிறது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. எனவே, வாக்காளர்கள் இடம்பெயர்வு, மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலிலிருந்து நீக்கவும், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாகப் பீஹாரில் இந்தப் பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்குவங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நவ.4ல் தொடங்கி டிச.4 வரை நடக்கிறது. இதனிடையே முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது எஸ்ஐஆர் மூலம் தெரியவந்துள்ளது.

G.K.M காலனி ஜீவானந்தம் தெருவில் உள்ள 64-ஆம் நம்பர் வீட்டில் மொத்தமாக 38 வாக்குகள் இருப்பதாகத் தெரியவந்தது. ஆனால் பிஎல்ஓ மற்றும் பிஎல்ஏ-2 ஆகிய இருவரும் நேரில் சென்று விசாரித்ததில், அந்த வீட்டில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வசித்து வருவதாகவும், மீதமுள்ள 35 பேர் யார் என்றே தெரியாது எனவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தொகுதியிலேயே 35 போலி வாக்காளர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலினும் திமுகவினரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மக்களுக்குப் புரிய வைத்துள்ளதாகப் பாஜக மாவட்ட நிர்வாகி இளங்கோ தெரிவித்துள்ளார்.

முதல்வர் தொகுதியில் கண்டறியப்பட்ட 35 போலி வாக்காளர்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் மிகவும் அவசியமானது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த நேர்மையாகத் தேர்தல் நடைபெறுவது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகள் மூலம் அது சாத்தியப்பட்டு வருவதாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: போலி வாக்காளர்கள்MK Stalinelection commission of indiavoters idS.I.R. works in full swing: Fake voters in the Chief Minister's constituency
ShareTweetSendShare
Previous Post

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

Next Post

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies