S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!
Nov 14, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

Web Desk by Web Desk
Nov 14, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம், முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

நாடு முழுவதும் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி இருக்கிறது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. எனவே, வாக்காளர்கள் இடம்பெயர்வு, மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலிலிருந்து நீக்கவும், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாகப் பீஹாரில் இந்தப் பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்குவங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நவ.4ல் தொடங்கி டிச.4 வரை நடக்கிறது. இதனிடையே முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது எஸ்ஐஆர் மூலம் தெரியவந்துள்ளது.

G.K.M காலனி ஜீவானந்தம் தெருவில் உள்ள 64-ஆம் நம்பர் வீட்டில் மொத்தமாக 38 வாக்குகள் இருப்பதாகத் தெரியவந்தது. ஆனால் பிஎல்ஓ மற்றும் பிஎல்ஏ-2 ஆகிய இருவரும் நேரில் சென்று விசாரித்ததில், அந்த வீட்டில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வசித்து வருவதாகவும், மீதமுள்ள 35 பேர் யார் என்றே தெரியாது எனவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தொகுதியிலேயே 35 போலி வாக்காளர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலினும் திமுகவினரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மக்களுக்குப் புரிய வைத்துள்ளதாகப் பாஜக மாவட்ட நிர்வாகி இளங்கோ தெரிவித்துள்ளார்.

முதல்வர் தொகுதியில் கண்டறியப்பட்ட 35 போலி வாக்காளர்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் மிகவும் அவசியமானது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த நேர்மையாகத் தேர்தல் நடைபெறுவது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகள் மூலம் அது சாத்தியப்பட்டு வருவதாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: போலி வாக்காளர்கள்MK Stalinelection commission of indiavoters idS.I.R. works in full swing: Fake voters in the Chief Minister's constituency
ShareTweetSendShare
Previous Post

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

Next Post

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

Related News

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

கோவை கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies