S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!
Jul 31, 2026, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம், முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

நாடு முழுவதும் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி இருக்கிறது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. எனவே, வாக்காளர்கள் இடம்பெயர்வு, மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலிலிருந்து நீக்கவும், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாகப் பீஹாரில் இந்தப் பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்குவங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நவ.4ல் தொடங்கி டிச.4 வரை நடக்கிறது. இதனிடையே முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது எஸ்ஐஆர் மூலம் தெரியவந்துள்ளது.

G.K.M காலனி ஜீவானந்தம் தெருவில் உள்ள 64-ஆம் நம்பர் வீட்டில் மொத்தமாக 38 வாக்குகள் இருப்பதாகத் தெரியவந்தது. ஆனால் பிஎல்ஓ மற்றும் பிஎல்ஏ-2 ஆகிய இருவரும் நேரில் சென்று விசாரித்ததில், அந்த வீட்டில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வசித்து வருவதாகவும், மீதமுள்ள 35 பேர் யார் என்றே தெரியாது எனவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தொகுதியிலேயே 35 போலி வாக்காளர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலினும் திமுகவினரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மக்களுக்குப் புரிய வைத்துள்ளதாகப் பாஜக மாவட்ட நிர்வாகி இளங்கோ தெரிவித்துள்ளார்.

முதல்வர் தொகுதியில் கண்டறியப்பட்ட 35 போலி வாக்காளர்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் மிகவும் அவசியமானது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த நேர்மையாகத் தேர்தல் நடைபெறுவது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகள் மூலம் அது சாத்தியப்பட்டு வருவதாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: போலி வாக்காளர்கள்MK Stalinelection commission of indiavoters idS.I.R. works in full swing: Fake voters in the Chief Minister's constituency
ShareTweetSendShare
Previous Post

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

Next Post

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies