S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!
Sep 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம், முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

நாடு முழுவதும் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி இருக்கிறது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. எனவே, வாக்காளர்கள் இடம்பெயர்வு, மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலிலிருந்து நீக்கவும், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாகப் பீஹாரில் இந்தப் பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்குவங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நவ.4ல் தொடங்கி டிச.4 வரை நடக்கிறது. இதனிடையே முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது எஸ்ஐஆர் மூலம் தெரியவந்துள்ளது.

G.K.M காலனி ஜீவானந்தம் தெருவில் உள்ள 64-ஆம் நம்பர் வீட்டில் மொத்தமாக 38 வாக்குகள் இருப்பதாகத் தெரியவந்தது. ஆனால் பிஎல்ஓ மற்றும் பிஎல்ஏ-2 ஆகிய இருவரும் நேரில் சென்று விசாரித்ததில், அந்த வீட்டில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வசித்து வருவதாகவும், மீதமுள்ள 35 பேர் யார் என்றே தெரியாது எனவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தொகுதியிலேயே 35 போலி வாக்காளர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலினும் திமுகவினரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மக்களுக்குப் புரிய வைத்துள்ளதாகப் பாஜக மாவட்ட நிர்வாகி இளங்கோ தெரிவித்துள்ளார்.

முதல்வர் தொகுதியில் கண்டறியப்பட்ட 35 போலி வாக்காளர்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் மிகவும் அவசியமானது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த நேர்மையாகத் தேர்தல் நடைபெறுவது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகள் மூலம் அது சாத்தியப்பட்டு வருவதாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: போலி வாக்காளர்கள்MK Stalinelection commission of indiavoters idS.I.R. works in full swing: Fake voters in the Chief Minister's constituency
Share
Tweet
SendShare
Previous Post

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

Next Post

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies