பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Murugesan M by Murugesan M
Nov 16, 2025, 09:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைப் படுகுழியில் தள்ளியுள்ளது. இதுகுறித்து ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

குடும்ப அரசியல், ஊழல், காட்டாட்சி போன்றவற்றை பொதுமக்கள் விரும்புவதில்லை என்பதையே நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தோல்விக்குக் குடும்ப அரசியலே முழுமுதற் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பீகார் மக்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆட்சியில் அமரும் அதிகாரத்தை வழங்கியபோது, கால்நடை தீவன ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், தனது முதலமைச்சர் பதவியை மனைவிக்கு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகளுக்கு எம்.பி., பதவி, மகன்களுக்குத் துணை முதலமைச்சர் பதவி, உறவினர்களுக்குப் பொறுப்புகள் என வாரி வழங்கிக் கட்சியினரை தவிக்கவிட்டதோடு, தனது குடும்பத்தின் மூலம் முழு மாநிலத்தையும் மொத்தமாகச் சுரண்டினார். லாலு பிரசாத் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கால்நடை தீவன ஊழல், அரசுக்கு வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்றது என அவர்மீதான அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள், பீகார் மக்கள் மனதில் பசுமரத்தாணி போன்று அப்படியே பதிந்து நின்றது…லாலு ஆட்சிக் காலத்தில், அரசு வேலைகளில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமாகப் பணிகளை ஒதுக்கியதும் மக்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய லாலுவும், அவரது குடும்பத்தினரும், நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வரும் நிலையில், பீகாரை ஆள லாலு குடும்பம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த அம்மாநில மக்கள், ராஷ்டிரிய ஜனதா தளத்தைப் புறக்கணித்ததால், தேர்தலில் குறைந்த இடங்களையே அக்கட்சி பெற்றிருக்கிறது. ஏற்கனவே லாலு குடும்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ராஷ்டிரிய கட்சி இன்னொரு குடும்ப கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்திருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தனர்… அந்த அதிருப்தியே பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் வரலாற்றில் இல்லாத தோல்வியைப் பரிசாக அளிக்கக் காரணம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்பிக்கையளிக்கக்கூடிய, நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்தித்த சூழலில், நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளைக் கூறி, மக்களை ஏமாற்றி எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று தேர்தல் களத்திற்கு வந்த மகாகத்பந்தன் கூட்டணிக்குப் பீகார் மக்கள் மரண அடியை கொடுத்திருக்கின்றனர். இதேபோன்று நிலை தமிழகத்திலும் நிலவுகிறது.

திமுக என்ற குடும்ப ஆட்சி, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தைப் பகிர்ந்து அளித்துள்ள நிலையில், வரும் தேர்தலில், பீகார் மக்கள் போன்று, தமிழக மக்களும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Biharbihar election 2025An end to family politics in Bihar elections: RJD falls into the abyss
ShareTweetSendShare
Previous Post

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

Next Post

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies