வான் சாகசத்தில் விபரீதம் : விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வான் சாகசத்தில் விபரீதம் : விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் சாகச நிகழ்ச்சியின்போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளான துயர சம்பவத்தை விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

துபாயில் வானில் வட்டமடித்து சாகசத்தில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானம் தரையில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமான கண்காட்சி தொடங்கி நடைபெற்று வந்தது.

விமான கண்காட்சியின் கடைசி நாளில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தக் கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர்.

இந்நிலையில், தேஜஸ் விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.15 மணி அளவில் நேர்ந்த இந்த விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய விமானப்படை, உயிரிழந்த விமானியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

மேலும் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இந்திய விமானப் படையின் தேஜஸ் ரக போர் விமானம் கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஜெய்சல்மாரில் நடைபெற்ற பயிற்சியின் போது முதன் முறையாக விபத்துக்குள்ளானது.

தற்போது துபாயிலும் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி மனதை உலுக்குகிறது.

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் நடைபெறும் விமான கண்காட்சிகளில் பாதுகாப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

அதேநேரத்தில், இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் தேஜஸ் விமானத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை பாதிக்காது என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: தேஜஸ் போர் விமானம்Air accident: Tejas aircraft crashesவிபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்துபாயில் சாகச நிகழ்ச்சிதேஜஸ் விமானம்IndianewsTodayindian airforce
ShareTweetSendShare
Previous Post

SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுகவினர் அச்சுறுத்தி வருகின்றனர் – அதிமுக

Next Post

திருவண்ணாமலை : தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies