கர்நாடக மாநிலத்திற்கான முதல்வர் போட்டியில் தான் எப்போதும் இருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு உட்கட்சி பூசல் நிலவுகிறது. ஏற்கனவே, சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், முதல்வர் போட்டியில் தான் எப்போதும் இருப்பதாக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஷ்வர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் முதல்வர் பதவி குறித்த இறுதி முடிவை எடுப்பார்கள் எனவும் கூறினார்.
















