மதுரை திருமங்கலம் அருகே கல்குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ராணுவ வீரர்களால் வைக்கப்பட்ட பேனர் கவனம் பெற்றுள்ளது.
திருமங்கலம் அடுத்த கல்லணை கிராமத்தில் மக்களின் எதிர்ப்பை மீறிச் செயல்பட்டுவரும் கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள், தங்கள் மனக் குமுறலை கொட்டும் விதமாகப் பேனர் வைத்தனர்.
அதில், நாட்டைப் பாதுகாக்க தெரிந்த எங்களுக்கு, உள்ளூர் விஷக் கிருமிகளிடம் இருந்து ஊரைப் பாதுகாக்க முடியவில்லையே என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
















