கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு - நயினார் நாகேந்திரன்
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு – நயினார் நாகேந்திரன்

வைகை அணை நிரம்பினாலும் விவசாயிகளை விடாது வாட்டும் வறட்சி!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு தான் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வீணாகக் கடலில் சென்று கலக்கும் வைகை அணையின் உபரிநீரானது, மதுரை உசிலம்பட்டி, தேனி ஆண்டிப்பட்டி மற்றும் திண்டுக்கல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர் தேவையையும், சுமார் 2000-த்திற்கும் அதிகமான விளைநிலங்களின் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்யட்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் 58 கிராமக் கால்வாய் திட்டம். 58 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயப் பெருமக்களின் தொடர் போராட்டங்களின் விளைவால் இக்கால்வாய் உருப் பெற்றிருந்தாலும் திமுக அரசின் அலட்சியத்தால் இன்னும் உயிர் பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைகை அணை நிரம்பி தளும்பிய போதும், தேனி மாவட்டத்தை மழை வெள்ளம் சூழ்ந்த போதும் 58 கிராம கால்வாயில் அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால் 114-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்தன. பாதிக்கப்பட்ட மக்களுடன் பாஜக நிர்வாகிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு கால்வாயை முறையாக சுத்தம் செய்யாமல் அவசரம் அவசரமாக திமுக அரசு தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதால், பயனடையும் கிராமங்களுக்குத் தண்ணீர் சென்றடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளைத் தூர்வாரி முறையாகப் பராமரித்தால் மட்டுமே தங்கு தடையற்ற நீரோட்டம் சாத்தியமாகும் என்ற அடிப்படை கூட அறியாமல் தங்களை வறட்சியின் பிடியில் சிக்க வைத்துள்ள திமுக அரசின் மீது தேனி மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பதை எனது நேற்றைய பிரச்சாரப் பயணத்தில் என்னால் உணர முடிந்தது.

58 கிராமக கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு தான் என்பது இன்று வெளிப்படையாகவே நமக்குத் தெரிகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK StalinDMK's chances of winning in villages are an empty dream - Nayinar Nagendran
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : கிராம நிர்வாக அலுவலரை ஆட்சியர் ஒருமையில் பேசியதாக புகார் – கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

தமிழ் பற்றை பிரிவினைவாத அரசியலுக்காக பயன்படுத்துகிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies