கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு - நயினார் நாகேந்திரன்
Sep 12, 2026, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு – நயினார் நாகேந்திரன்

வைகை அணை நிரம்பினாலும் விவசாயிகளை விடாது வாட்டும் வறட்சி!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 07:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு தான் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வீணாகக் கடலில் சென்று கலக்கும் வைகை அணையின் உபரிநீரானது, மதுரை உசிலம்பட்டி, தேனி ஆண்டிப்பட்டி மற்றும் திண்டுக்கல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர் தேவையையும், சுமார் 2000-த்திற்கும் அதிகமான விளைநிலங்களின் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்யட்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் 58 கிராமக் கால்வாய் திட்டம். 58 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயப் பெருமக்களின் தொடர் போராட்டங்களின் விளைவால் இக்கால்வாய் உருப் பெற்றிருந்தாலும் திமுக அரசின் அலட்சியத்தால் இன்னும் உயிர் பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைகை அணை நிரம்பி தளும்பிய போதும், தேனி மாவட்டத்தை மழை வெள்ளம் சூழ்ந்த போதும் 58 கிராம கால்வாயில் அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால் 114-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்தன. பாதிக்கப்பட்ட மக்களுடன் பாஜக நிர்வாகிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு கால்வாயை முறையாக சுத்தம் செய்யாமல் அவசரம் அவசரமாக திமுக அரசு தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதால், பயனடையும் கிராமங்களுக்குத் தண்ணீர் சென்றடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளைத் தூர்வாரி முறையாகப் பராமரித்தால் மட்டுமே தங்கு தடையற்ற நீரோட்டம் சாத்தியமாகும் என்ற அடிப்படை கூட அறியாமல் தங்களை வறட்சியின் பிடியில் சிக்க வைத்துள்ள திமுக அரசின் மீது தேனி மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பதை எனது நேற்றைய பிரச்சாரப் பயணத்தில் என்னால் உணர முடிந்தது.

58 கிராமக கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு தான் என்பது இன்று வெளிப்படையாகவே நமக்குத் தெரிகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK StalinDMK's chances of winning in villages are an empty dream - Nayinar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி : கிராம நிர்வாக அலுவலரை ஆட்சியர் ஒருமையில் பேசியதாக புகார் – கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

தமிழ் பற்றை பிரிவினைவாத அரசியலுக்காக பயன்படுத்துகிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies