வர்த்தக பேச்சுவார்த்தை : அவசரப்படும் அமெரிக்கா - நிதானம் காட்டும் இந்தியா!
Jan 14, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வர்த்தக பேச்சுவார்த்தை : அவசரப்படும் அமெரிக்கா – நிதானம் காட்டும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இரண்டாவது முறையாக அதிபரான ட்ரம்ப், சர்வதேச நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். வர்த்தக பற்றாக்குறை என்று கூறி கடந்த ஜூலை மாதம், இந்தியாவுக்கு 25 சதவீத வரியும், அதன்பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் கூடுதலாக 25 சதவீதம் வரியும் விதித்தார்.

வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அமெரிக்க அரசு வரி விதித்ததை இந்தியா கடுமையாகக் கண்டித்தது. தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

அமெரிக்க தரப்பு தங்களுடைய வேளாண்மை மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் எனக் கூறியதும், அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தடைபடுவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கியதால் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா ஆண்டுக்குச் சுமார் 2.5 பில்லியன் டாலர் சேமித்ததாக CLSA அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால் உள்நாட்டு தேவைக்காகச் சுமார் 88 சதவீத எண்ணெய் இறக்குமதி ஒரு நாட்டுக்கு இது மிகவும் குறைவானது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லூக்கோயில் (Lukoil) மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததைத் தொடர்ந்து, சென்ற மாதத்தை விட 50 சதவீதம் குறைவாக, ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 9.48 லட்சம் பீப்பாய் எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.

மறுபுறம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் இந்தியா அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 5.4 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி ஆகியுள்ளது. மேலும், அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி. இறக்குமதி செய்ய முதல்முறையாக இந்தியா நீண்டகால ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்க வளைகுடா கடற்கரையிலிருந்து ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி. இறக்குமதி செய்ய நாட்டின் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளன. நாட்டின் மொத்த எல்.பி.ஜி., இறக்குமதியில் இது 10 சதவீதமாகும். இந்த மாற்றங்கள் எல்லாம் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் இந்தியா, அவசரப் படவில்லை என்பதை அமெரிக்காவுக்கு இந்தியா புரிய வைத்துள்ளது.

Tags: Trade negotiations: America in a hurry - India showing restraintIndiaamericausa
ShareTweetSendShare
Previous Post

எப்போது கிடைக்கும் மின்சாரம்? : 40 வருடங்களாக இருள் – அச்சத்தில் அலறும் மக்கள்!

Next Post

26/11 பயங்கரவாத தாக்குதல் இனி நடக்கவே நடக்காது : தேசமே உறுதி ஏற்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies