அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் - இந்தியா கடும் எச்சரிக்கை!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் – இந்தியா கடும் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனத் தரப்பு எவ்வளவு மறுத்தாலும் இந்த மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றப் போவதில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நீண்டகாலமாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே லடாக் பகுதியில் எல்லையோரமாகச் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனாவின் “தெற்கு திபெத்” என்று கூறிவருகிறது. இந்த நிலையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை, ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் 18 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்துச் சீன அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி, லண்டனில் இருந்து ஜப்பானுக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் சீனாவில் ட்ரான்சிட் எனப்படும் காத்திருக்கும் நேரத்தில் இந்தியா பாஸ்போர்ட் செல்லாது என்று கூறி துன்புறுத்தியதாகப் பெமா வாங் தாங்​ குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு சோதனையின் ‘இந்தியா, இந்தியா என்று கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை தனியாக அழைத்துச் சென்றதாகவும் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஷாங்காய் வழியாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்ததாகவும், இம்முறை கிளம்பும் முன் இந்திய குடிமக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று லண்டனில் உள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையின் போது, சீன குடியேற்ற அதிகாரிகளும் China Eastern Airlines ஊழியர்களும் தன்னை கேலி செய்ததாகவும், “சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தெளிவான தகவல், சரியான உணவு அல்லது விமான நிலைய வசதிகளைப் பயன்படுத்தும் உரிமைகளும் தனக்கு மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்ட தம்மை இந்திய தூதரக அதிகாரிகள், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு பத்திரமாக வழியனுப்பி வைத்ததாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆன்லைனில் தம்மை ட்ரோல் செய்வதைக் கண்டித்துள்ள பெமா வாங் தாங், மத்திய அரசால் எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்றும், அனைத்து இந்தியர்களின் கண்ணியத்துக்காகவே என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எக்ஸ் தளத்தில் இல்லை என்றாலும், தனக்கு ஆதரவாகப் பேசிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள்ளார். இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியரை விமான நிலையத்தில் தடுத்து வைத்த விவகாரம்குறித்து சீன அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச விமானப் பயணத்தை நிர்வகிக்கும் பல மரபுகளை மீறும் வகையில் நடந்து கொண்ட சீன அதிகாரிகளால் தங்கள் செயல்களை இன்னும் விளக்க முடியவில்லை என்று கூறியுள்ள ஜெய்ஸ்வால், சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் 24 மணிநேரம் வரை விசா இல்லாத போக்குவரத்தை அனுமதிக்கும் சீனாவின் சொந்த விதிமுறைகளையும் மீறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இந்தியா கடும் எச்சரிக்கைஅருணாச்சல பெண்சீன அதிகாரிகள்Indiaஇந்தியாChinese officials violated Arunachal woman - India issues strong warning
ShareTweetSendShare
Previous Post

26/11 பயங்கரவாத தாக்குதல் இனி நடக்கவே நடக்காது : தேசமே உறுதி ஏற்பு!

Next Post

கருப்பு நிற கேரட் : களைகட்டும் சாகுபடி : ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies