கருப்பு நிற கேரட் : களைகட்டும் சாகுபடி : ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
Sep 10, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருப்பு நிற கேரட் : களைகட்டும் சாகுபடி : ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாகக் கருப்பு நிற கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன கருப்பு நிற கேரட் சாகுபடி? பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவித் தற்போது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில்தான் கருப்பு நிற கேரட் சாகுபடிக்கான சோதனை முயற்சியில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை களமிறங்கியிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் பீகாரில் இருந்து கருப்பு நிற கேரட் விதைகள் பெறப்பட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவின் நாற்றங்காலில் தற்போது அவை விதைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருப்பு நிற கேரட் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். கருப்பு நிற கேரட்டில் ஆன்த்தோசைலின் என்கிற திரவம் அதிகமாக உள்ளதால் மனிதர்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

கருப்பு நிற கேரட்டில் விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்டவை அதிகமாக உள்ளதால் மனிதர்களுக்குப் பல நன்மைகளை தரக்கூடியது. இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்…. தற்போது சோதனை அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில விவசாயிகளுக்கும் கருப்பு நிற கேரட் விதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருப்பு நிற கேரட் விதைகள் கிராமிய அபிவிருத்தி இயக்கம் மூலம் முதன்முறையாக நீலகிரி மாவட்ட விவசாயி சந்திரன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டு அவரது நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே குன்னூர் சிம்ஸ் பூங்கா, நஞ்சநாடு தோட்டக்கலைத்துறை ஆகிய இடங்களில் சோதனை அடிப்படையில் இந்தக் கருப்பு நிற கேரட் பயிரிடப்பட்டுள்ளன.

இயற்கை முறையில் இந்தக் கருப்பு நிற கேரட் சாகுபடி செய்யும் சோதனை நடைபெற்று வருகிறது. கருப்பு நிற கேரட் இலைகளில் உள்ள எண்ணெய், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்தாக உள்ளது என்பதும் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு நாடுகள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை முறையில் பல காய்கறிகள் பயிரிடப்பட்டு வரும் நிலையில், மனிதர்களுக்குப் பல நன்மைகளைத் தரக்கூடிய இந்தக் கருப்பு நிற கேரட் சாகுபடியும் நடைபெறுகிறது. இந்தச் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடியுடன் கருப்பு நிற கேரட் சாகுபடியையும் இணைத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Tags: விவசாயிகள்Cultivation of black carrots that are weed-free: Farmers showing interestகேரட் களைகட்டும் சாகுபடி
Share
Tweet
SendShare
Previous Post

அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் – இந்தியா கடும் எச்சரிக்கை!

Next Post

அடுத்த சில மணி நேரங்களில் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி – பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies