விருதுநகரில் ஜவுளிப்பூங்காவில் நில ஒதுக்கீடு தொடங்கப்பட்டுள்ள மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
பாரதப் பிரதமர் மோடியல் விருதுநகருக்கு வழங்கப்பட்ட பி.எம்.மித்ரா ஜவுளிப்பூங்காவில் தொழிற்சாலைகளுக்கான நில ஒதுக்கீடு தொடங்கப்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
சுமார் 1,052 ஏக்கரில் ரூ.1,894 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் மூலம், வெகு விரைவிலேயே விருதுநகரில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை நினைக்கையிலேயே மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
கர்மவீரர் பிறந்த மண்ணான விருதுநகரில் பி.எம்.மித்ரா அமைக்கக் கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை வாயிலாக ஒப்புதல் அளித்ததோடு, அதை மூன்றே மாதத்திற்குள் செயல்பாட்டிற்கும் கொண்டு வந்திருக்கிறது
தமிழக முன்னேற்றத்தில் நமது பிரதமர் மோடிக்கு உள்ள எல்லையில்லா அக்கறை பற்றி இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு என்ன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















