“டிட்வா” புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 6வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
“டிட்வா” புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் 6வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஒரு வாரமாக கடலுக்கு செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன . மோசமான வானிலை காரணமாக 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான சேவையும் ரத்தானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
















